நற்றிணை - 279. பாலை

வேம்பின் ஒண் பழம் முணைஇ, இருப்பைத் தேம் பால் செற்ற தீம் பழம் நசைஇ, வைகு பனி உழந்த வாவல், சினைதொறும், நெய் தோய் திரியின் தண் சிதர் உறைப்ப, நாட் சுரம் உழந்த வாள் கேழ் ஏற்றையொடு |
5 |
பொருத யானைப் புட் தாள் ஏய்ப்ப, பசிப் பிடி உதைத்த ஓமைச் செவ் வரை வெயில் காய் அமையத்து இமைக்கும் அத்தத்து, அதர் உழந்து அசையினகொல்லோ- ததர்வாய்ச் சிலம்பு கழீஇய செல்வம் |
10 |
பிறருழைக் கழிந்த என் ஆயிழை அடியே? |
தலைவனைச் சார்ந்து மணமுடிக்கும் பொழுது காலிலணிந்திருந்த செறிந்த வாயினையுடைய சிலம்பினைக் கழற்றுதற்குச் செய்யும் விழாச்சிறப்பை யான் கண்டு மகிழாது பிறர்கண்டு மகிழும்படி சென்றொழிந்த அழகிய கலன் அணிந்த என் புதல்வியின் அடிகள்; வேம்பின் ஒள்ளிய பழத்தைத் தின்னுதல் வெறுத்து இருப்பையின் தேன்போலும் பால்வற்றிய இனிய பழத்தை விரும்பி; வைகிய பனியிலே உழந்த வெளவால் கிளைகள்தோறும் செல்லுதலால் அவற்றின்மேல் நெய் தோயந்¢த திரிசுடர் விழுதல் போலத் தண்ணிய பனித்துளிகள் மிகவிழ; விடியற் காலையிலே சுரத்திற் சென்று வருந்திய வாள்போலும் நிறமுற்ற வரிபொருந்திய ஆண்புலியொடு போர் செய்த யானையின்; புண்ணையுடைய கால்போலப் பொளிந்தெடுத்துத் தின்ன வேண்டிப் பசிமிக்க பிடியானை உதைத்து மேற்பட்டையைப் பெயர்த்த ஓமையின்; சிவந்த அடிமரம்; ஞாயிறெழுந்து வெயில் வீசும்போது விளங்கித் தோன்றா நிற்கும் பாலையின் அருஞ்சுரநெறியிலே சென்று; வருந்துகின்றனவோ? ஓ ஐயோ !
மகட் போக்கிய தாய் சொல்லியது. - கயமனார்
தேடல் தொடர்பான தகவல்கள்:
நற்றிணை - 279. பாலை, இலக்கியங்கள், உழந்த, நற்றிணை, பாலை, நெய், வெயில், சென்று, வேம்பின், எட்டுத்தொகை, சங்க, பழம்