நற்றிணை - 277. பாலை
கொடியை; வாழி- தும்பி!- இந் நோய் படுகதில் அம்ம, யான் நினக்கு உரைத்தென; மெய்யே கருமை அன்றியும், செவ்வன் அறிவும் கரிதோ- அறனிலோய்!- நினக்கே? மனை உறக் காக்கும் மாண் பெருங் கிடக்கை |
5 |
நுண் முள் வேலித் தாதொடு பொதுளிய தாறு படு பீரம் ஊதி, வேறுபட நாற்றம் இன்மையின், பசலை ஊதாய்: சிறு குறும் பறவைக்கு ஓடி, விரைவுடன் நெஞ்சு நெகிழ் செய்ததன் பயனோ? அன்பு இலர், |
10 |
வெம் மலை அருஞ் சுரம் இறந்தோர்க்கு என் நிலை உரையாய், சென்று, அவண் வரவே. |
வண்டே! அறநெறியிலே செல்லாதோய் நீ மிக்க கொடியை நமது மாளிகையைப் பொருந்தக் காவலாயிருக்கும் மாட்சிமைப் படப் பெரியதாக அமைக்கப்பட்ட நுண்ணிய முட்களையுடைய வேலியிலே படர்ந்து; தேனொடு தழைந்த குலைகட்டிய பீர்க்கம்பூவிலே சென்று தேனைப் பருகி; அதற்கு மாறாக நறுநாற்றமில்லாமையினாலே என் பசலையிடத்து முரன்றாயும் அல்லை; சிறிய குறிய நின் பேடு விரும்புதலும் நீ விரைவாக வோடிச் சென்று அதன் மனம் நெகிழப் புணர்ந்து தலையளி செய்ததன் பயனாகவோ?; என்னிடத்து அன்பிலராகிக் கொடிய மலையிலே செல்லுதற்கரிய சுரத்திற் சென்ற தலைவர்பால் ஆங்குச்சென்று அவர் விரைவில் வருமாறு ஈங்கு யானுற்ற நிலைமையை யுரைத்தாயுமில்லை; நினக்கு நின்னுடம்பே கரியததாலன்றியும் அறிவும் (நன்கு) கரிய நிறமுடையதோ? அதனையேனுங் கூறிக்காண்; இங்ஙனம் கொடியையாகிய நின்னிடத்து என் துன்பத்தைக் கூறியதனாலேயே இந்நோயிலே பட்டு இப்பொழுதே இறப்பேனாக; நீ நீண்டகாலம் வாழ்ந்திருப்பாயாக!;
பட்ட பின்றை வரையாது, கிழவோன் நெட்டிடைக் கழிந்து பொருள்வயிற் பிரிய,ஆற்றளாகிய தலைமகள் தும்பிக்குச் சொல்லியது. - தும்பி சேர் கீரனார்
தேடல் தொடர்பான தகவல்கள்:
நற்றிணை - 277. பாலை, இலக்கியங்கள், பாலை, சென்று, நற்றிணை, அறிவும், செய்ததன், நினக்கு, கொடியை, எட்டுத்தொகை, சங்க, தும்பி