நற்றிணை - 276. குறிஞ்சி

'கோடு துவையா, கோள் வாய் நாயொடு காடு தேர்ந்து அசைஇய வய மான் வேட்டு வயவர் மகளிர்' என்றிஆயின், குறவர் மகளிரேம்; குன்று கெழு கொடிச்சியேம்; சேணோன் இழைத்த நெடுங் காற் கழுதில் |
5 |
கான மஞ்ஞை கட்சி சேக்கும் கல் அகத்தது எம் ஊரே; செல்லாது சேந்தனை, சென்மதி நீயே- பெரு மலை வாங்கு அமைப் பழுனிய நறவு உண்டு, வேங்கை முன்றில் குரவையும் கண்டே. |
10 |
தலைவனே! கொம்பையூதி கௌவிக் கொல்லும் நாயோடு காட்டின் கண்ணே ஆராய்கின்ற விருப்பமுற்ற வலிய மானை வேட்டையாற் கொள்ளும் வேட்டுவ வீரரின் மகளிர் என எம்மைக் கூறுவீராயின்; வேட்டுவ மகளிரல்லேம் யாம் குறமகளிரேம் மலையிலிருக்கிற கொடிச்சியரேம்; தினை காவலன் கட்டிய நீண்டகாலையுடைய கட்டுப் பரணை; காட்டில் இருக்கின்ற மயில்கள் தாம் இருத்தற்குரிய பஞ்சரமாகக் கொண்டு அதன்கண்ணே தங்கா நிற்கும்; எம்மூர் இம் மலையினகத்ததாயிராநின்றது; ஆதலால், நீ இப்பொழுது நின்னூர்க்குச் செல்லாது எம்மூரை யடைந்து பெரிய மலையின் கண்ணே தோன்றி வளைந்த மூங்கிலாலாக்கிய குழாயில் நிரப்பி முற்ற வைத்த கள்ளைப் பருகி; வேங்கை மரத்தையுடைய முன்றிலிலே யாம் அயருங் குரவையையும் கண்டு மகிழ்ந்து பின் நாள் நின் ஊரை அடைவாயாக.
பகற்குறி வந்து பெயரும் தலைமகனை உலகியல் சொல்லியது. - தொல் கபிலர் >
தேடல் தொடர்பான தகவல்கள்:
நற்றிணை - 276. குறிஞ்சி, இலக்கியங்கள், குறிஞ்சி, நற்றிணை, கண்ணே, வேட்டுவ, யாம், வேங்கை, மகளிர், எட்டுத்தொகை, சங்க, செல்லாது