நற்றிணை - 266. முல்லை
கொல்லைக் கோவலர் குறும்புனம் சேர்ந்த குறுங் காற் குரவின் குவி இணர் வான் பூ ஆடுடை இடைமகன் சூடப் பூக்கும் அகலுள் ஆங்கண் சீறூரேமே; அதுவே சாலும் காமம்; அன்றியும், |
5 |
எம் விட்டு அகறிர்ஆயின், கொன் ஒன்று கூறுவல்- வாழியர், ஐய!- வேறுபட்டு இரீஇய காலை இரியின், பெரிய அல்லவோ, பெரியவர் நிலையே? |
10 |
ஐயனே! வாழ்வீராக!; நீவிர் எம்மைக் கைவிட்டு வேற்று நாட்டுக்குச் செல்வீராயின்; அக் காலத்தில் யாம் கொல்லைகளிலே தனியே இருக்கும் கோவலருடைய சிறிய புனத்தைச் சார்ந்த குறுகிய காம்பினையுடைய குராமரத்தின் குவிந்த கொத்திலுள்ள வெள்ளிய பூ; ஆடு மேய்த்தலையுடைய இடையன் அணிந்துகொள்ளுமாறு மலராநிற்கும் அகன்ற இடத்தையுடைய சீறூரின்கண்ணே யிருத்தலையுடையேமாயிரா நின்றேம்; அங்ஙனம் உறைகுவதொன்றுமே எங்கள் விருப்பத்துக்குப் பொருந்துதலா யிருக்கும்; அல்லாமலும் யான் கூறுவதில் ஒருபயனும் இல்லையாயினும் இன்னும் ஒன்று கூறாநிற்பேன்; நீயிர் வேற்று நாட்டுக்குச் செல்லக் கருதி எம்மை இல்லின்கண் இருத்தியகாலை யாம் வருந்தியக்கால்; பெருங்குடியிலே பிறந்தவர் நிலை பெரிய அல்லவாமன்றோ?
தலைமகனைச் செலவுடன்பட்டது; கடிநகர் வரைப்பில் கண்டு மகிழ்ந்த தலைமகற்குத் தோழி 'நும்மாலே ஆயிற்று' என்று சொல்லியதூஉம் ஆம். - கச்சிப்பேட்டு இளந்தச்சனார்
தேடல் தொடர்பான தகவல்கள்:
நற்றிணை - 266. முல்லை, இலக்கியங்கள், நற்றிணை, முல்லை, நாட்டுக்குச், யாம், வேற்று, ஒன்று, எட்டுத்தொகை, சங்க, பெரிய