நற்றிணை - 265. குறிஞ்சி
இறுகு புனம் மேய்ந்த அறு கோட்டு முற்றல் அள்ளல் ஆடிய புள்ளி வரிக் கலை வீளை அம்பின் வில்லோர் பெருமகன், பூந் தோள் யாப்பின் மிஞிலி, காக்கும் பாரத்து அன்ன- ஆர மார்பின் |
5 |
சிறு கோற் சென்னி ஆரேற்றன்ன- மாரி வண் மகிழ் ஓரி கொல்லிக் கலி மயில் கலாவத்து அன்ன, இவள் ஒலி மென் கூந்தல் நம் வயினானே. |
காய்ந்த புல்லை மேய்கின்ற உதிர்ந்த கொம்பினையுடைய முதிர்ச்சியையுடைய சேற்றில் ஓட்டி வருந்தச் செய்த புள்ளியையும் வரியையும் உடைய கலைமானை; எய்யும் ஒலியையுடைய அம்பினையும் வில்லினையுமுடைய வீரர் தலைவனாகிய பொலிவு பொருந்திய தோளிலே கவசம் பூட்டிய மிஞிலி என்பவனாலே காவல் செய்து வருகின்ற; பாரம் என்னும் ஊரைப்போன்ற ஆத்திமாலையையுடைய மார்பையுடைய சிலவாகிய ஊர்களை ஆட்சிகொண்ட செங்கோலையுடைய சோழனுடைய; ஆரேற்றைப் போன்ற இவளுடைய தலைவியாகிய மழை போன்ற கொடையும் கள்ளுணவுமுடைய ஓரியென்பவனது கொல்லி மலையிலிருக்கின்ற; செருக்கிய மயிலைப் போன்ற நம் காதலியாவாள்; அம் மயிலின் கலாபம் போன்ற தழைந்த மெல்லிய கூந்தலையுடையாள்; நம்பாலள் அல்லளோ?; ஆதலின் நெஞ்சமே கவலை கொள்ளாதே; நின்செயல் விரைய முடிவு பெறுங்காண்!
பின்னின்ற தலைமகன் நெஞ்சிற்கு உரைத்தது. - பரணர்
தேடல் தொடர்பான தகவல்கள்:
நற்றிணை - 265. குறிஞ்சி, இலக்கியங்கள், நற்றிணை, குறிஞ்சி, அன்ன, மிஞிலி, சங்க, எட்டுத்தொகை