நற்றிணை - 245. நெய்தல்

நகையாகின்றே- தோழி!- 'தகைய அணி மலர் முண்டகத்து ஆய் பூங்கோதை மணி மருள் ஐம்பால் வண்டு படத் தைஇ, துணி நீர்ப் பௌவம் துணையோடு ஆடி, ஒழுகு நுண் நுசுப்பின், அகன்ற அல்குல், |
5 |
தௌ தீம் கிளவி! யாரையோ, என் அரிது புணர் இன் உயிர் வவ்விய நீ?' என, பூண் மலி நெடுந் தேர்ப் புரவி தாங்கி, தான் நம் அணங்குதல் அறியான், நம்மின் தான் அணங்குற்றமை கூறி, கானல் |
10 |
சுரும்பு இமிர் சுடர் நுதல் நோக்கி, பெருங் கடற் சேர்ப்பன் தொழுது நின்றதுவே |
தோழீ! தகுதியையுடைய அழகிய மலர் மிக்க கழிமுள்ளியின் நுண்ணிய பூமாலையை; நீலமணிபோன்ற கூந்தலில் வண்டுகள் பொருந்தும்படி சூடி; தௌ¤ந்த நீரையுடைய கடலிலே தோழியரோடு சென்று நீராடி; நேர்மையுடைய நுணுகிய இடையையும் அகன்ற அல்குலையும் தௌ¤ந்த இனிய சொல்லையுமுடையாய்; எனது அரிதாயமைந் திருக்கின்ற இனிய உயிரைக் கைக்கொண்ட நீதான் யாவளோ? உரையாய்! என்று; பூண் நிரம்பிய நெடிய தேரிலே பூட்டிய குதிரையொடு வந்து அவன்தான் நம்மை வருத்துதல் அறியானாய்; நம்மால் அவன் வருந்தியது மட்டும் கூறி; கழிச் சோலையின்கண்ணே நாம் நின்றபொழுது நறுமணத்தால் வண்டுகள் வந்து சூழ்ந்தொலிக்கின்ற ஒளியையுடைய நமது நெற்றியை நோக்கி; பெரிய கடற் சேர்ப்பன் கை கூப்பி வணங்கி நின்றதைத் கருதுந்தோறும் நகையுடையதாயிராநின்றது காண்!
குறை நேர்ந்த தோழி தலைமகளை முகம் புக்கது. - அல்லங்கீரனார்
தேடல் தொடர்பான தகவல்கள்:
நற்றிணை - 245. நெய்தல், இலக்கியங்கள், நற்றிணை, நெய்தல், கடற், சேர்ப்பன், வண்டுகள், தௌ¤ந்த, வந்து, இனிய, நோக்கி, பூண், சங்க, எட்டுத்தொகை, தோழி, மலர், தான், அகன்ற, கூறி