நற்றிணை - 238. முல்லை

வறம் கொல வீந்த கானத்து, குறும் பூங் கோதை மகளிர் குழூஉ நிரை கடுப்ப, வண்டு வாய் திறப்ப விண்ட பிடவம், மாலை அந்தி, மால் அதர் நண்ணிய பருவம் செய்த கருவி மா மழை! |
5 |
'அவர் நிலை அறியுமோ, ஈங்கு' என வருதல் சான்றோர்ப் புரைவதோ அன்றே; மான்று உடன் உர உரும் உரறும் நீரின், பரந்த பாம்பு பை மழுங்கல் அன்றியும், மாண்ட கனியா நெஞ்சத்தானும், |
10 |
இனிய அல்ல, நின் இடி நவில் குரலே. |
கோடை தெறுதலாலே பட்டுப்போன காட்டிலே சிறிய பூவணிந்த கூந்தலையுடைய ஆயர் மகளிர் கூடுகின்ற கூட்டம் போல; வண்டுகள் வாய்திறந்து தேனைப் பருகும்படி மலர்ந்த பிடவுகளையுடைய அந்திமாலையில்; யான் காமநோய் மிகக்கொள்ளுமாறு கார்ப்பருவத்தைச் செய்த மின்னல் முதலாகிய தொகுதியையுடைய கரியமேகமே!; நீ "அவர் நிலைமையை இங்கு நான் கூற அறிந்து கொள்" என்று வருதல்; சான்றோர் செய்கையைஒத்ததாகமாட்டாது கண்டாய்!; ஒரு சேர மயங்கி நின் இடித்து முழங்குந் தொழிலையுடைய குரல் வலிய இடியாய் முழங்குந் தன்மையினாலே; பரவிய பாம்புகள் படம் மழுங்கி யடங்குமாறு செய்வதல்லாமல்; மாட்சிமைப்பட்ட தலைவரது நெஞ்சம் கனியும்படி செய்ய வல்லனவல்லவாதலால் நின் இடித்து முழங்கும் அக் குரல் எனக்கு இனிமை செய்வன அல்ல;
தலைமகள் பருவம் கண்டு அழிந்தது. - கந்தரத்தனார்
தேடல் தொடர்பான தகவல்கள்:
நற்றிணை - 238. முல்லை, இலக்கியங்கள், முல்லை, நின், நற்றிணை, அல்ல, வருதல், குரல், முழங்குந், இடித்து, செய்த, எட்டுத்தொகை, சங்க, மகளிர், பருவம், அவர்