நற்றிணை - 237. பாலை
நனி மிகப் பசந்து, தோளும் சாஅய், பனி மலி கண்ணும் பண்டு போலா; இன் உயிர் அன்ன பிரிவு அருங் காதலர் நீத்து நீடினர் என்னும் புலவி உட்கொண்டு ஊடின்றும் இலையோ?- மடந்தை!- |
5 |
உவக்காண் தோன்றுவ, ஓங்கி- வியப்புடை இரவலர் வரூஉம் அளவை, அண்டிரன் புரவு எதிர்ந்து தொகுத்த யானை போல, உலகம் உவப்ப, ஓது அரும் வேறு பல் உருவின், ஏர்தரும் மழையே! |
10 |
மடந்தாய்!; வியப்புடைய இரவலர் வரும் பொழுது; அவர்கட்குக் கொடுப்பது கருதி "ஆய்அண்டிரன்" சேர்த்துவைத்த யானைத்திரள் போல; உலகத்தில் வாழும் உயிர்கள் மகிழ்ச்சியடையச் சொல்லுதற்கரிய வெவ்வேறாகிய உருவத்தோடு எழுகின்ற மேகங்கள்; ஓங்கித் தோன்றுவனவற்றை உவ்விடத்தே காணாய்! இஃது அவர் குறித்த பருவமன்றோ?; இதுகாறும் மிகப் பசந்து தோளும்¢ வாட்டமடைந்து; நீர் வடிகின்ற கண்களும் முன்போல் இன்றி வேறுபாடு கொள்ள; இனிய உயிர் போன்ற பிரிதற்கரிய காதலர் என்னைக் கைவிட்டு நெடுந்தூரம்சென்று ஒழிந்தனரே என்று கூறப்படுகின்ற புலவியை நீ நின் உள்ளத்தேகொண்டு; ஊடுகின்றதும் இல்லையோ? இஃதென்ன வியப்பு;
தோழி உரை மாறுபட்டது. - காரிக்கண்ணனார்
தேடல் தொடர்பான தகவல்கள்:
நற்றிணை - 237. பாலை, இலக்கியங்கள், நற்றிணை, பாலை, காதலர், இரவலர், உயிர், மிகப், எட்டுத்தொகை, சங்க, பசந்து