நற்றிணை - 227. நெய்தல்
அறிந்தோர் 'அறன் இலர்' என்றலின், சிறந்த இன் உயிர் கழியினும் நனி இன்னாதே; புன்னைஅம் கானல் புணர் குறி வாய்த்த பின் ஈர் ஓதி என் தோழிக்கு, அன்னோ! படு மணி யானைப் பசும்பூட் சோழர் |
5 |
கொடி நுடங்கு மறுகின் ஆர்க்காட்டு ஆங்கண், கள்ளுடைத் தடவில் புள் ஒலித்து ஓவாத் தேர் வழங்கு தெருவின் அன்ன, கௌவை ஆகின்றது- ஐய!- நின் அருளே. |
ஐயனே! புன்னையஞ் சோலையிடத்தும் புணர்தற்குப் பலகாலும் நீ குறித்த குறிவயின் வந்துநின்ற பின்னிய குளிர்ந்த கூந்தலையுடைய என் தோழிக்கு; ஐயோ! நீ செய்த தலையளிதான் ஒலிக்கின்ற மணியையுடைய யானையையும் பசிய பொன்னாலாகிய பூண்களையுமுடைய சோழரது; கொடி நுடங்கா நின்ற தெருக்களையுடைய ஆர்க்காடு என்னும் பதியிலே; கள்ளையுடைய சாடியின்கண் வண்டுகள் ஒலித்து; நீங்காத தேர்கள் இயங்கும் தெருவையொத்த பெரிய பூசலுண்டாகா நின்றது. அப் பூசலாகிய பழிச் சொல்லும் எப்படிக் கூறப்படுகன்றதோ வெனில்; அறிந்தோம் என்று கூறிக்கொள்ளும் அவரெல்லாம் அறநெறியிலே நிற்பவரேயல்லர் என்று எவ்விடத்தும் பரந்தோங்கின; அவ்வலர்தான் அவளது இனிய உயிர் இறந்துபட்ட பின்னும் இன்னாமையைத் தருகின்ற தன்மையுடையது காண்!
வரையாது நெடுங்காலம் வந்து ஒழுக, தோழி தலைமகனை வரைவு முடுகச் சொல்லியது. - தேவனார்
தேடல் தொடர்பான தகவல்கள்:
நற்றிணை - 227. நெய்தல், இலக்கியங்கள், நற்றிணை, நெய்தல், கொடி, ஒலித்து, தோழிக்கு, உயிர், எட்டுத்தொகை, சங்க