நற்றிணை - 170. மருதம்
மடக் கண், தகரக் கூந்தல், பணைத் தோள், வார்ந்த வால் எயிற்று, சேர்ந்து செறி குறங்கின், பிணையல் அம் தழை தைஇ, துணையிலள் விழவுக் களம் பொலிய வந்து நின்றனளே; எழுமினோ எழுமின், எம் கொழுநற் காக்கம்; |
5 |
ஆரியர் துவன்றிய பேர் இசை முள்ளூர், பலர் உடன் கழித்த ஒள் வாள் மலையனது ஒரு வேற்கு ஓடியாங்கு, நம் பன்மையது எவனோ, இவள் வன்மை தலைப்படினே? |
மடப்பத்தையுடைய கண்பார்வையையும் மயிர்ச்சாந்தணிந்த கூந்தலையும் பருத்த தோளையும்; நேர்மையாகிய வெளிய பற்களையும் திரண்டு நெருங்கிய துடைகளையுமுடைய; ஒப்பில்லாத இவ் விறலி பிணைத்த அழகிய தழையுடையையுடுத்துத் திருவிழாச் செய்யும் இவ்விடனெங்கும் பொலிவெய்துமாறு வந்து நிற்றலாயினள் காணுங்கோள்!; நம் காதலனை இன்னும் வேறொரு பரத்தைபால் இவள் தூது சென்று செலுத்தாதபடி நாம் பாதுகாக்கற் பாலம்; எழுங்கோள்! எழுங்கோள்!, இவள் நன்மை தலைப்படின் இவள் கொண்ட காரியம் கைகூடுமாயினோ!; ஆரியர் நெருங்கிச் செய்த போரின்கண்ணே பெரிய புகழையுடைய முள்ளூர்ப் போர்க்களத்துப் பலருடன் சென்று உறையினின்று உருவிய ஒள்ளிய வாட்படையையுடைய மலையனது; ஒப்பற்ற வேற்படையை அஞ்சி அவ் ஆரியப்படை ஓடியதுபோல; பலர் கூடிய நம்முடைய கூட்டமும் ஒழியவேண்டியதன்றி வேறுயாது பயன்படுங்கண்டீர்?
தோழி விறலிக்கு வாயில் மறுத்தது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
நற்றிணை - 170. மருதம், இவள், இலக்கியங்கள், மருதம், நற்றிணை, சென்று, எழுங்கோள், மலையனது, வந்து, எட்டுத்தொகை, சங்க, ஆரியர், பலர்