நற்றிணை - 130. நெய்தல்
வடு இன்று நிறைந்த மான் தேர்த்தெண் கண் மடிவாய்த் தண்ணுமை நடுவண் ஆர்ப்ப, கோலின் எறிந்து காலைத் தோன்றிய செந் நீர்ப் பொது வினைச் செம்மல் மூதூர்த் தமது செய் வாழ்க்கையின் இனியது உண்டோ? |
5 |
எனை விருப்புடையர் ஆயினும், நினைவிலர்; நேர்ந்த நெஞ்சும் நெகிழ்ந்த தோளும் வாடிய வரியும் நோக்கி, நீடாது, 'எவன் செய்தனள், இப் பேர் அஞர் உறுவி?' என்று ஒரு நாள் கூறின்றுமிலரே; விரிநீர் |
10 |
வையக வரையளவு இறந்த, எவ்வ நோய்; பிறிது உயவுத் துணை இன்றே. |
தோழீ ! தௌ¤ந்த ஓசையையுடைய இடமகன்ற தோலை மடித்துப் போர்த்த வாயையுடைய தண்ணுமை இடையில் ஒலிப்ப; குற்றமின்றி எல்லா இலக்கணமும் நிறைந்த குதிரைகள் பூட்டிய தேரைக் கோலாலெறிந்து செலுத்தி; விடியற்காலையிலே புறத்தே தோன்றிச் சென்ற செம்மையாகிய நீர்மையையும் பொதுவாகிய செயலையும் உடைய நம் காதலர்; பழைமையாகிய இவ்வூரின்கண்ணே தமதாகச் செய்யப்படுகின்ற இல்வாழ்க்கையினுங்காட்டில் இனியதொரு பொருளும் உண்டோ? அதனை அறியாராய் வேறொரு பொருளுண்டென அகன்று விட்டனர்; எவ்வளவு விருப்புடையவராயினும்; இப்பொழுது எம்மை நினையாதவராயினர்; அன்றியும் அவருக்கு உடன்பட்ட என்னெஞ்சும் நெகிழ்ச்சியுற்ற தோளும் வாடிய எனது நிறமும் பார்த்து; பாணித்தலின்றி இப் பெரிய துன்பம் உற்றவள் என்ன காரியம் செய்து கொண்டனளோ? என்று ஒரு நாளேனும் கூறினாரிலர்; யானடைந்த துன்ப நோயோ விரிந்த கடல் நீர் சூழ்ந்த நிலத்தின் எல்லையளவையும் கடந்தன; இனி உசாவுந் துணை வேறியாதுமில்லை; இனி எவ்வண்ணம் உய்வேன்?
பிரிவிடை மெலிந்த தலைவி வன்புறை எதிரழிந்து சொல்லியது. - நெய்தல்தத்தனார்
தேடல் தொடர்பான தகவல்கள்:
நற்றிணை - 130. நெய்தல், இலக்கியங்கள், நெய்தல், நற்றிணை, தோளும், வாடிய, துணை, உண்டோ, நிறைந்த, எட்டுத்தொகை, சங்க, தண்ணுமை