நற்றிணை - 107. பாலை

உள்ளுதொறும் நகுவேன்- தோழி!- வள்உகிர்ப் பிடி பிளந்திட்ட நார் இல் வெண் கோட்டுக் கொடிறு போல் காய வால் இணர்ப் பாலை, செல் வளி தூக்கலின், இலை தீர் நெற்றம் கல் இழி அருவியின் ஒல்லென ஒலிக்கும், |
5 |
புல் இலை ஓமைய, புலி வழங்கு அத்தம் சென்ற காதலர்வழி வழிப்பட்ட நெஞ்சே நல்வினைப்பாற்றே; ஈண்டு ஒழிந்து, ஆனாக் கௌவை மலைந்த யானே, தோழி! நோய்ப்பாலேனே. |
10 |
தோழீ! பெரிய உகிரையுடைய பிடியானை தின்னுதற் பொருட்டு மேலுள்ள தோலைப் பறித்துக் கொண்டதனால் நாரில்லாத வெளிய கிளைகளையும் பற்றுக்குறடு போன்ற காய்களையுமுடைய வெளிய பூங்கொத்துக்களையுடைய வெட்பாலையினுடைய; ஓடுகின்ற காற்று அசைத்தலினால் இலை யுதிர்ந்த கிளையிலுள்ள நெற்றுக்கள் மலையினின்று விழும் அருவியைப் போல ஒல்லென்னும்படி ஒலியாநிற்கும்; புல்லிய இலையையுடைய ஓமையையுடைய புலி இயங்குகின்ற சுரத்து நெறியிலே சென்ற என் காதலர்பால்; அவரை வழிபட்டுப் பின்னே சென்றொழிந்த என்னெஞ்சம் முன்பு செய்த நல்வினையின் பயனை இப்பொழுது துய்ப்பதாயிராநின்றது; அந்த நெஞ்சுபோல நல்வினை செய்திலாதேனாகலின் இங்கே தங்கி ஊரார் தூற்றும் அடங்காத பழிச்சொல்லைச் சூடப்பெற்ற யானே தோழீ ! தீவினையின் பாலேனாகி அதன் பயனை நுகராநின்றேன்; இங்ஙனம் இருவினைப் பயனையும் நுகருமாறு பெற்றதனை நினைக்குந்தோறும் நகை தோன்றுதலானே யானே என்னை நகுவது செய்யா நிற்பேன்காண்!;
பிரிவிடை மெலிந்த தலைவி தோழிக்குச் சொல்லியது
தேடல் தொடர்பான தகவல்கள்:
நற்றிணை - 107. பாலை, பாலை, இலக்கியங்கள், யானே, நற்றிணை, தோழீ, வெளிய, பயனை, தோழி, எட்டுத்தொகை, சங்க, புலி, சென்ற