நற்றிணை - 106. நெய்தல்
அறிதலும் அறிதியோ- பாக!- பெருங்கடல் எறி திரை கொழீஇய எக்கர் வெறி கொள, ஆடு வரி அலவன் ஓடுவயின் ஆற்றாது, அசைஇ, உள் ஒழிந்த வசை தீர் குறுமகட்கு உயவினென் சென்று, யான், உள் நோய் உரைப்ப, |
5 |
மறுமொழி பெயர்த்தல் ஆற்றாள், நறு மலர் ஞாழல் அம் சினைத் தாழ்இணர் கொழுதி, முறி திமிர்ந்து உதிர்த்த கையள், அறிவு அஞர் உறுவி ஆய் மட நிலையே? |
பாகனே ! பெரிய கடலின் மோதுகின்ற திரையாலே கொழிக்கப்பட்ட மணன் மேட்டில் நறுமணம் வீசாநிற்ப; விளையாடுகின்ற புள்ளிகளையுடைய ஞெண்டைப் பிடிக்குமாறு சென்றவழி அஞ்ஞெண்டு ஓடுமிடத்தே பின் தொடர்ந்து செல்ல ஆற்றாது களைப்புற்று அதன்மீது சென்ற விருப்பம் நீங்கியிருந்த குற்றமற்ற இளமையுடையாளிடத்து; இப்பொழுது வருந்துகின்றேனாகிய யான் சென்று என் உள்ளத்தின்கண்ணே யுள்ள வினைவயிற் செல்ல வேண்டிய கவற்சியைக் கூறிய அளவிலே; மறுமொழி கூறுதற்கு நாவெழாமையால் ஆற்றாளாய்; நறிய மலரையுடைய ஞாழலினது தாழ்ந்த அழகிய கிளையிலுள்ள பூங்கொத்தைச் கொய்து அதனோடு இளந்தளிரையும் சேரப் பிசைந்து உதிர்த்த கையையுடையளாகி; அறிவு மயக்கமுற்றவளின் அழகிய மடப்பத்தினிலையை நீ; அறிந்திருத்தலையும் உடையையோ? உடையையாயின் அதற்கேற்றபடி கடவுவாயாக!;
பருவ வரவின்கண் பண்டு நிகழ்ந்ததோர் குறிப்பு உணர்ந்த தலைவன், அதனைக் கண்டு தாங்ககில்லானாய் மீள்கின்றான், தேர்ப்பாகற்குச்சொல்லியது. - தொண்டைமான் இளந்திரையன்
தேடல் தொடர்பான தகவல்கள்:
நற்றிணை - 106. நெய்தல், இலக்கியங்கள், நற்றிணை, நெய்தல், உதிர்த்த, அறிவு, செல்ல, அழகிய, மறுமொழி, சென்று, எட்டுத்தொகை, சங்க, ஆற்றாது, யான்