குறுந்தொகை - 388. பாலை - தோழி கூற்று
(தலைமகள் தன்னுடன் வருதற்கு உடம்பட்டமையை உணர்ந்ததலைவன் பாலைநிலத்தின் இன்னாமையையும் அதில் நடக்க மாட்டாத தலைவியினது மென்மையையும் கருதிப் போதற்கு ஒருப்படானாக,“நும்மொடு வரின் தலைவிக்குப் பாலை இனியதாகும்” என்று தோழிகூறிச் செலவு உடம்படச் செய்தது.)
நீர்கால் யாத்த நிரையிதழ்க் குவளை கோடை ஒற்றினும் வாடா தாகும் கவணை அன்ன பூட்டுப்பொரு தசாஅ உமணெருத் தொழுகைத் தோடுநிரைத் தன்ன முளிசினை பிளக்கு முன்பின் மையின் |
5 |
யானை கைமடித் துயவும் கானமும் இனியவாம் நும்மொடு வரினே. |
|
- அவ்வையார். |
நீரைத் தன்னுடைய அடியிலே கட்டப்பெற்ற வரிசையாகிய இதழ்களையுடைய குவளைமலரானது மேல்காற்று வீசினாலும் வாடாததாகும் கவணைப்போன்ற நுகத்தின் பிணிப்புப் பொருதமையால் வருந்துதலையுடைய உப்புவாணிகருடையஎருதுகள் பூட்டிய வண்டிகளின் தொகுதியை வரிசையாக வைத்தாற் போன்ற உலர்ந்தமரக்கிளைகளை பிளத்தற் ரிய வன்மை இல்லாமையால் யானை தன் துதிக்கையை மடித்து வருந்துகின்ற பாலைநிலங்களும் நும்மோடு வந்தால் தலைவிக்கு இனிமை யுடையனவாகும்.
முடிபு: குவளை வாடாதாகும்; நும்மொடு வரின் - கானமும்இனிய ஆம்.
கருத்து: தலைவி நும்மோடு வரின் பாலைநிலம் அவளுக்கு இனியதேயாகும்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 388. பாலை - தோழி கூற்று, பாலை, இலக்கியங்கள், வரின், குறுந்தொகை, தோழி, கூற்று, நும்மொடு, நும்மோடு, யானை, சங்க, எட்டுத்தொகை, குவளை