குறுந்தொகை - 38. குறிஞ்சி - தலைவி கூற்று
(தலைவன் வரைபொருளுக்குப் பிரிந்து நெடுங்காலமாக வாராதிருப்ப, வருந்திய தலைவியை நோக்கித் தோழி, ‘‘நின்னை வரைந்து கொள்ளும் பொருட்டன்றோ அவர் பொருளீட்டச் சென்றார்; அங்ஙனமிருப்ப நீ அதனை நன்றென்று கருதாமல் வருந்துவது யாதுகாரணம் பற்றி?’’ என்று வினாவியபோது, ‘’அவர் பிரிவை ஆற்றும் வன்மை என்பால் இல்லை’’ என்று தலைவி உணர்த்தியது.)
கான மஞ்ஞை யறையீன் முட்டை வெயிலாடு முசுவின் குருளை உருட்டும் குன்ற நாடன் கேண்மை என்றும் நன்றுமன் வாழி தோழி உண்கண் நீரொ டொராங்குத் தணப்ப |
5 |
உள்ளா தாற்றல் வல்லு வோர்க்கே. | |
- கபிலர். |
தோழி! காட்டிலுள்ள மயிலானது பாறையில் ஈன்ற முட்டைகளை வெயிலில் விளையாடும் முசுவின் குட்டி உருட்டுதற்கு இடமாகிய மலைநாட்டையுடையவனாகிய தலைவனது நட்பு அவன் பிரிய மை தீட்டப்பெற்ற கண்ணினின்று பெருகும் நீரோடு ஒருபடியாக அப்பிரிவை நினைந்து வருந்தாமல் பொறுத்துக்கொள்ளுதலில் வன்மையுடையோர்க்கு மாத்திரம் எக்காலத்தும் மிக நல்லதாகும்.
முடிபு: குன்றநாடன் கேண்மை ஆற்றல் வல்லுவோர்க்கு என்றும் நன்று.
கருத்து:
கருத்து: தலைவனது பிரிவை ஆற்றும் வன்மையி லேனாயினேன்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 38. குறிஞ்சி - தலைவி கூற்று, இலக்கியங்கள், தலைவி, குறிஞ்சி, தோழி, கூற்று, குறுந்தொகை, என்றும், தலைவனது, கருத்து, கேண்மை, ஆற்றும், சங்க, பிரிவை, எட்டுத்தொகை, முசுவின்