குறுந்தொகை - 348. பாலை - தோழி கூற்று
(தலைவன் பிரிவானென்றறிந்து வருந்திய தலைவியை நோக்கி,"அவர் போவாராயின் நின்துன்பத்தைக் காணாது செல்வாரோ? செல்லார்"என்று தோழி கூறியது.)
தாமே செல்ப வாயிற் கானத்துப் புலந்தேர் யானைக் கோட்டிடை யொழிந்த சிறுவீ முல்லைக் கொம்பிற் றாஅய் இதழழிந் தூறுங் கண்பனி மதரெழிற் பூணக வனமுலை நனைத்தலும் |
5 |
காணார் கொல்லோ மாணிழை நமரே. | |
- மாவளத்தனார். |
மாட்சிமைப்பட்ட ஆபரணங்களை அணிந்தோய் நம் தலைவர் நம்மைவிட்டுத் தாம் மட்டும் பிரிந்து செல்வாராயின் காட்டினிடத்து மேய்புலத்தைத் தேடி செல்லும் யானையினதுகொம்பினிடத்தே முறிந்து தங்கிய சிறிய பூக்களையுடைய முல்லைக் கொடியின்கொம்பைப்போல இமையைக் கடந்து ஊறுகின்ற கண்ணீர்த்துளி பரவி மதர்த்த அழகையுடைய அணிகலன்களைத் தன்னிடத்தே உடையஅழகையுடைய நின் நகில்களை நனைத்தலையும் காணாரோ!
முடிபு: மாணிழை, நமர் தாமே செல்பவாயின், காணார் கொல்லோ!
கருத்து: தலைவர் நின் வருத்தத்தை யறிந்து போதலை யொழிவர்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 348. பாலை - தோழி கூற்று, தோழி, இலக்கியங்கள், கூற்று, குறுந்தொகை, பாலை, மாணிழை, தலைவர், நின், கொல்லோ, தாமே, எட்டுத்தொகை, சங்க, முல்லைக், காணார்