குறுந்தொகை - 291. குறிஞ்சி - தலைவன் கூற்று
(தலைவன் பாங்கனுக்குத் தலைவி இவ்விடத்தினள், இவ்வியல்பினள் என்று கூறியது.)
சுடுபுன மருங்கிற் கலித்த வேனற் படுகிளி கடியுங் கொடிச்சிகைக் குளிரே இசையின் இசையா இன்பா ணித்தே கிளியவள் விளியென எழலொல் லாவே அதுபுலந் தழுத கண்ணே சாரற் |
5 |
குண்டுநீர்ப் பைஞ்சுனைப் பூத்த குவளை வண்டுபயில் பல்லிதழ் கலைஇத் தண்துளிக் கேற்ற மலர்போன் றனவே. |
|
- கபிலர். |
தோழ! மரங்களைவெட்டிச் சுட்ட கொல்லையில் தழைத்ததினையின் இடத்தே வீழ்கின்ற கிளிகளைஓட்டுகின்ற தலைவியினது கையின்கண் உள்ள குளிர் என்னும் கருவியானது இசையோடு பொருந்தி இனியதாளத்தை உடையது; அக்குளிரின்ஓசையை அத் தலைவியின் பாட்டு என்று கருதி கிளிகள் தாம் படிந்த தினையினின்றும்எழுதலைப் பொருந்தா; அதனைப்புலந்து அழுத அவளுடைய கண்கள் மலைப்பக்கத்திலே உள்ள ஆழமாகிய நீரை உடைய பசிய சுனையின் இடத்தே பூத்த குவளையினது வண்டுகள் பழகுகின்ற பல இதழ்கள் கலைந்து தண்ணிய மழைத் துளியை ஏற்றுக் கொண்ட மலர்களைப் போன்றன.
முடிபு: கொடிச்சியின் கைக்குளிர் இன்பாணித்து; கிளி எழலொல்லா;கண் மலர் போன்றன.
கருத்து: தலைவி தினைப்புனத்தில் காவல் செய்து கொண்டு இருக் கின்றாள்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 291. குறிஞ்சி - தலைவன் கூற்று, இலக்கியங்கள், தலைவன், குறிஞ்சி, குறுந்தொகை, கூற்று, உள்ள, இடத்தே, போன்றன, சங்க, எட்டுத்தொகை, தலைவி, பூத்த