குறுந்தொகை - 275. முல்லை - தோழி கூற்று
(தலைவன் கூறிச் சென்ற பருவம் வந்த காலத்துத் தலைவியை நோக்கி, "மணி ஒலி செவிப்படுகின்றது; அது தலைவனது தேர்மணி ஓசையோ என்று சென்று பார்ப்போம்" என்று தோழி கூறியது.)
முல்லை யூர்ந்த கல்லுய ரேறிக் கண்டனம் வருகஞ் சென்மோ தோழி எல்லூர்ச் சேர்தரும் ஏறுடை யினத்துப் புல்லார் நல்லான் பூண்மணி கொல்லோ செய்வினை முடித்த செம்ம லுள்ளமொடு |
5 |
வல்வில் இளையர் பக்கம் போற்ற ஈர்மணற் காட்டாறு வரூஉம் தேர்மணி கொல்லாண் டியம்பிய வுளவே. |
|
- ஒக்கூர் மாசாத்தியார். |
தோழி! அங்கே ஒலிப்பனவாக உள்ளவை மாலைக் காலத்தில் ஊரை வந்து அடையும் காளையை உடைய பசுவினத்தில் உள்ள புல்லை உண்ட நல்ல பசுக்கள் கழுத்தில் பூண்ட மணி ஓசையோ? தாம் செய்த வினையை முற்ற முடித்ததனால் ஆகிய நிறைவுடைய உள்ளத்தோடு வலிய வில்லை உடைய இளைய வீரர் தன் அருகில் பாதுகாப்ப ஈரமாகிய மணலை உடைய காட்டு வழியிலே வரும் தேரின் மணி ஓசையோ? முல்லைக்கொடி படர்ந்த கல்லின் மேல் ஏறி கண்டு வருவேம்; வருவாயாக.
முடிபு: ஆண்டு இயம்பிய உள; ஆன் பூண்மணி கொல்? தேர்மணி கொல்? ஏறிக் கண்டனம் வருகம்; சென்மோ.
கருத்து: தலைவனது தேரின் மணியோசை கேட்டலின் அவன் வருகின்றானே்னத் தோற்றுகின்றது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 275. முல்லை - தோழி கூற்று, தோழி, இலக்கியங்கள், முல்லை, ஓசையோ, குறுந்தொகை, கூற்று, தேர்மணி, உடைய, தேரின், கொல், பூண்மணி, தலைவனது, எட்டுத்தொகை, சங்க, கண்டனம், சென்மோ