குறுந்தொகை - 263. குறிஞ்சி - தோழி கூற்று
(தாய் வெறியாட்டெடுக்கக் கருதி இருப்பதைத் தோழி தலைவிக்குக்கூறுவாளாகிச் சிறைப்புறத்தானாகிய தலைவனுக்கு உணர்த்தியது.)
மறிக்குர லறுத்துத் தினைப்பிரப் பிரீஇச் செல்லாற்றுக் கவலைப் பல்லியங் கறங்கத் தோற்ற மல்லது நோய்க்குமருந் தாகா வேற்றுப் பெருந் தெய்வம் பலவுடன் வாழ்த்திப் பேஎய்க் கொளீஇயள் இவளெனப் படுதல் |
5 |
நோதக் கன்றே தோழி மால்வரை மழைவிளை யாடு நாடனைப் பிழையே மாகிய நாமிதற் படவே. |
|
- பெருஞ்சாத்தனார். |
தோழி! பெரிய மலையினிடத்து மேகம் விளையாடுகின்ற நாட்டிற்குத் தலைவன் மாட்டு தவறிலேமாகிய நாம் இக் களவொழுக்கத்திலே நிகழா நிற்ப ஆட்டின் கழுத்தை அறுத்து தினையை உடைய பிரப்பை வைத்து ஓடுகின்ற ஆற்றுத் துருத்தியிலே பலவகையான இசைக் கருவிகள் ஒலிப்ப தாம் வெளிப்படுதலை அன்றி நம்முடைய காம நோய்க்குப் பரிகாரம் ஆகாத வேறாகிய பெரிய தெய்வங்கள் பலவற்றை ஒருங்கு வாழ்த்தி இவள் பேயால் கொள்ளப் பட்டாள் என்று கூறப்படுவ வருந்துதற்கு உரியதாகும்.
முடிபு: தோழி, நாம் இதற்பட, அறுத்து இரீஇ வாழ்த்தி எனப்படுதல் நோதக்கன்று.
கருத்து: தாய் வெறியாடக் கருதினாள்; அதனை நாம் தடுக்க வேண்டும்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 263. குறிஞ்சி - தோழி கூற்று, தோழி, இலக்கியங்கள், குறிஞ்சி, குறுந்தொகை, கூற்று, நாம், அறுத்து, வாழ்த்தி, சங்க, எட்டுத்தொகை, தாய், பெரிய