குறுந்தொகை - 257. குறிஞ்சி - தலைவி கூற்று
(வரைவுணர்த்திய தோழியை நோக்கி, "தலைவனைக் கண்ட போது இன்பமும் அவனைக் காணாத போது துன்பமும் உடையேனாக இருந்தேன். இனி எப்பொழுதும் உடனுறைதலால் இன்பமே உண்டாகும்" என்பதுபடத்தலைவி கூறியது.)
வேரு முதலும் கோடு மோராங்குத் தொடுத்த போலத் தூங்குபு தொடரிக் கீழ்தாழ் வன்ன வீழ்கோட் பலவின் ஆர்கலி வெற்பன் வருதொறும் வரூஉம் அகலினும் அகலா தாகி |
5 |
இகலுந் தோழிநங் காமத்துப் பகையே. | |
- உறையூர்ச் சிறுகந்தனார். |
தோழி! நம்மிடத்து உள்ள காமமாகிய பகை வேரிலும் அடிமரத்திலும் கிளையிலும் ஒரு படியாக தொடுத்து வைத்தன போல தொங்கித் தொடர்ந்து கீழே தாழ்ந்தாற் போன்ற தணிந்த குலைகளை உடைய பலா மரத்தினை உடைய ஆரவாரத்தை உடைய மலைக்குத் தலைவன் இங்கே வருந்தோறும் வெளிப்படும்; அவன் அகன்றாலும் போகாததாகி மாறுபடும்; இஃது என்ன வியப்பு!
முடிபு: தோழி, காமத்துப் பகை, வெற்பன் வருதொறும் வரூஉம்;அகலினும் இகலும்.
கருத்து: தலைவனைப் பிரிதலின்றி ஒன்றியிருத்தலே எனக்கு இன்பம் பயப்பது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 257. குறிஞ்சி - தலைவி கூற்று, இலக்கியங்கள், குறிஞ்சி, குறுந்தொகை, உடைய, தலைவி, கூற்று, அகலினும், காமத்துப், தோழி, வரூஉம், போது, எட்டுத்தொகை, சங்க, வெற்பன், வருதொறும்