குறுந்தொகை - 255. பாலை - தோழி கூற்று
(வினைமேற் சென்ற தலைவன் தன் மாட்டுள்ள குறித்த இடத்தின்கட் செல்லாமல் இடையே மீள்வன் என்று கவன்ற தலைவியை நோக்கி, "அவர் தாம் செல்லும் பாலை நிலத்தில் யானை தன் சுற்றத்தைப் பாதுகாக்கும் காட்சியைக் கண்டு, நாமும் நம் இல்லறக் கடன் இறுப்பதற்கு நம் முயற்சி முற்றல் வேண்டும் என்று செல்வார்" என்று தோழி கூறியது.)
பொத்தில் காழ அத்த யாஅத்துப் பொரியரை முழுமுதல் உருவக் குத்தி மறங்கெழு தடக்கையின் வாங்கி உயங்குநடைச் சிறுகண் பெருநிரை உறுபசி தீர்க்கும் தடமருப் பியானை கண்டனர் தோழி |
5 |
தங்கட னிறீஇய ரெண்ணி யிடந்தொறும் காமர் பொருட்பிணிப் போகிய நாம்வெங் காதலர் சென்ற வாறே. |
|
- கடுகு பெருந்தேவனார். |
தோழி! தம்முடைய கடமையை நிறைவேற்றும் பொருட்டு கருதி இடங்கள் தோறும் விருப்பத்தை உடைய பொருண் முயற்சிக்கண்உள்ள உள்ளப் பிணிப்பினால் சென்ற நாம் விரும்பும் தலைவர் நம்மைப் பிரிந்து சென்றவழியில் புரையற்ற வயிரத்தைஉடையனவாகிய அருவழியில் நின்ற யாமரங்களின் பொரிந்த திரண்ட அடியை உருவும்படி தன் கொம்பால் குத்தி வன்மை பொருந்திய வளைந்த கையினால் கொண்டு தந்து வருந்திய நடையையும் சிறிய கண்களையும் உடைய பெரியயானை வரிசையின் மிக்க பசியைத் தீர்க்கின்ற வளைந்த கொம்பை உடைய ஆண் யானையை கண்டார்.
முடிபு: தோழி, இறீஇயர் எண்ணிப் போகிய காதலர் சென்றவாற்றில், யானை கண்டனர்.
கருத்து: தலைவர் வினைமுற்றியே மீள்வர்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 255. பாலை - தோழி கூற்று, தோழி, இலக்கியங்கள், பாலை, உடைய, சென்ற, கூற்று, குறுந்தொகை, காதலர், வளைந்த, தலைவர், போகிய, கண்டனர், எட்டுத்தொகை, யானை, குத்தி, சங்க