குறுந்தொகை - 232. பாலை - தோழி கூற்று
(தலைவன் பிரிந்திருந்த காலத்தில், “தலைவர் நம்மை நினைத்திலர்போலும்!” எனக் கவன்ற தலைவியை நோக்கி, “அவர் நினையாமலிரார்;வினை முற்றாமையின் வந்திலர்” என்று தோழி கூறியது.)
உள்ளார் கொல்லோ தோழி உள்ளியும் வாய்ப்புணர் வின்மையின் வாரார் கொல்லோ மரற்புகா வருந்திய மாவெருத் திரலை உரற்கா லியானை யொடித்துண் டெஞ்சிய யாஅ வரிநிழல் துஞ்சும் |
5 |
மாயிருஞ் சோலை மலையிறந் தோரே. | |
- ஊண் பித்தையார். |
தோழி! மலராகியஉணவை உண்ட பெரிய பிடரைஉடைய ஆண்மான் உரலைப்போன்ற காலை உடைய யானை முறித்து உண்டு குறையச் செய்த யாமரத்தின்புள்ளிகளை உடைய நிழலில் தூங்குகின்ற மிகப் பெரிய சோலைகளைஉடைய மலைகளைக் கடந்து நம்மைப் பிரிந்து சென்றதலைவர் நம்மை நினைத்தாரலரோ? அன்றி நினைத்தும் வினை முற்றி மீள்வதற்கு வாய்த்த செவ்வியைஉணராமையினால் வாராராயினரோ?
முடிபு: தோழி, மலையில் இறந்தோர் உள்ளார் கொல்? உள்ளியும்வாய்ப்பு உணர்வின்மையின் வாரார்கொல்?
கருத்து: தலைவர் வினை முற்றாமையின் வந்திலர்; விரைவில்வருவர்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 232. பாலை - தோழி கூற்று, தோழி, இலக்கியங்கள், வினை, கூற்று, குறுந்தொகை, பாலை, கொல்லோ, பெரிய, உடைய, உள்ளார், நம்மை, எட்டுத்தொகை, சங்க, முற்றாமையின்