குறுந்தொகை - 231. மருதம் - தலைவி கூற்று
(தலைவனுக்குத் தூதாக வந்த தோழியை நோக்கி, “அவர் இங்கேவந்தாலும் என்னோடு அளவளாவாமல் செல்வர். அவருக்கு என்பால் அன்புஇலதாயிற்று” என்று தலைவி கூறி வாயில் மறுத்தது.)
ஓரூர் வாழினும் சேரி வாரார் சேரி வரினும் ஆர முயங்கார் ஏதி லாளர் சுடலை போலக் காணாக் கழிப மன்னே நாணட்டு நல்லறி விழுந்த காமம் |
5 |
வில்லுமிழ் கணியிற் சென்றுசேட் படவே. | |
- பாலைபாடிய பெருங்கடுங்கோ. |
தோழி! தலைவர் நம்மோடு ஓர் ஊரிலே வாழ்ந்தாலும் நாம் இருக்கும்தெருவில் வாரார்; இத்தெருவில்வந்தாலும் நன்றாகத் தழுவிக் கொள்ளார்; நாணத்தை அழித்து தக்கதிதுதகாததிது என்று எண்ணும் நல்ல அறிவை இழக்கச் செய்யும்காமமானது வில்லால் எய்யப்பட்டஅம்பைப் போல போய் நெடுந்தூரத்தில்அழியும்படி அயலாருடையசுடுகாட்டைப் போல நம்மைக் கண்டும்வேறொன்றும் புரியாமல் செல்லுவார்.
முடிபு: வாரார்; முயங்கார்; காமம் சேட்படக் கழிப.
கருத்து:தலைவர் என்பால் அன்பின்றி ஒழுகுகின்றார்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 231. மருதம் - தலைவி கூற்று, தலைவி, இலக்கியங்கள், மருதம், கூற்று, வாரார், குறுந்தொகை, கழிப, காமம், தலைவர், முயங்கார், என்பால், எட்டுத்தொகை, சங்க, சேரி