குறுந்தொகை - 228. நெய்தல் - தலைவி கூற்று
(தலைவனுடன் இல் வாழ்க்கை நடத்திய தலைவியைநோக்கி, “நீஇதுகாறும் நன்றாக ஆற்றி இருந்தாய்!” என்று தோழி கூறிய பொழுது,“தலைவர் என் நெஞ்சிற்கு அணியராய் இருந்ததனாலும் அவர் நாட்டுத்திரை நம்மூர்க்கு வந்து பெயர்ந்ததனாலும் ஆற்றி இருந்தேன்” என்றுதலைவி கூறியது.)
வீழ்தாழ் தாழை யூழுறு கொழுமுகை குருகுளர் இறகின் விரிபுதோ டவிழும் கானல் நண்ணிய சிறுகுடி முன்றில் திரைவந்து பெயரும் என்பநத் துறந்து நெடுஞ்சே ணாட்டார் ஆயினும் |
5 |
நெஞ்சிற் கணியர் தண்கட னாட்டே. | |
- செய்தி வள்ளுவர் பெருஞ்சாத்தனார். |
தோழி! நம்மைப் பிரிந்துசென்று மிக்க சேய்மையில்உள்ள நாட்டில் இருப்பவராயினும் நெஞ்சிற்கு அணிமை இடத்துள்ளாரது தண்ணிய கடலை உடைய நாட்டினிடத்து விழுது தாழ்ந்ததாழையினது முதிர்ந்த கொழுவிய அரும்பு நாரைகள்கோதுகின்ற சிறகைப் போல விரிந்துமடல்கள் மலர்கின்ற கடற்கரைச் சோலையில் பொருந்திய சிற்றூரின் முன்னிடத்தில் அலைகள் வந்து மீண்டு செல்லும்.
முடிபு:சிறுகுடி முன்றிலில் திரை வந்து அணியரது தண்கடனாட்டுப் பெயரும்.
கருத்து:தலைவன் என் நெஞ்சில் இருந்தமையின் ஆற்றி இருந்தேன்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 228. நெய்தல் - தலைவி கூற்று, இலக்கியங்கள், ஆற்றி, வந்து, தலைவி, நெய்தல், குறுந்தொகை, கூற்று, சிறுகுடி, பெயரும், தோழி, எட்டுத்தொகை, சங்க, நெஞ்சிற்கு