குறுந்தொகை - 215. பாலை - தோழி கூற்று
(தலைவன் பிரிந்திருந்த காலத்தில் வருந்திய தலைவியை நோக்கி,“உன்னுடைய துன்பம் நீங்கும்; தலைவர் இன்று வந்து விடுவார்” என்று தோழி உறுதி கூறியது.)
படரும் பைப்பயப் பெயருஞ் சுடரும் என்றூழ் மாமலை மறையும் இன்றவர் வருவர்கொல் வாழி தோழி நீரில் வறுங்கயந் துழைஇய விலங்குமருப் பியானை குறும்பொறை மருங்கின் அமர்துணை தழீஇக் |
5 |
கொடுவரி இரும்புலி காக்கும் நெடுவரை மருங்கிற் சுரனிறந் தோரே. |
|
- மதுரை அளக்கர்ஞாழார் மகனார் மள்ளனார். |
தோழி! துன்பமும்மெல்ல மெல்ல நீங்கும்; ஒளி விடுகின்றசூரியன் பெரிய அத்தகிரியின் கண்மறையா நின்றது; ஆதலின் நீர் இல்லாத வறிய குளத்தைத் துழாவிய விளங்கிய கொம்புகளை உடைய ஆண் யானைகள் குறிய குண்டுக் கற்களுக்கு அருகில் தாம் விரும்புகின்ற பிடிகளைத் தழுவி வளைந்த கோடுகளை உடைய பெரியபுலி தாக்குதலினின்றும் பாதுகாக்கின்ற உயர்ந்த மலைப் பக்கத்தில் உள்ள பாலை நிலத்தைக் கடந்து சென்றோராகிய அத் தலைவர் இன்று வருவர்!; நீ வாழ்வாயாக!
முடிபு: தோழி, படரும் பெயரும்; என்றூழ் மறையும்; சுரனிறந்தோராகிய அவர் இன்று வருவர்; வாழி!
கருத்து:தலைவர் இன்று வருவர்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 215. பாலை - தோழி கூற்று, தோழி, பாலை, இலக்கியங்கள், இன்று, தலைவர், வருவர், கூற்று, குறுந்தொகை, வாழி, உடைய, மறையும், நீங்கும், எட்டுத்தொகை, சங்க, படரும், என்றூழ்