குறுந்தொகை - 212. நெய்தல் - தோழி கூற்று
(தலைவனது குறையைத் தலைவி நயக்கும்படி, “தலைவனது தேர்வந்து வறிதே பெயர்வதாயிற்று; அவன் விருப்பம் கழிந்தது. அது கருதிவருந்துகின்றேன்” என்று தோழி கூறியது.)
கொண்கன் ஊர்ந்த கொடுஞ்சி நெடுந்தேர் தெண்கட லடைகரைத் தெளிமணி யொலிப்பக் காண வந்து நாணப் பெயரும் அளிதோ தானே காமம் விளிவது மன்ற நோகோ யானே. |
5 |
- நெய்தற் கார்க்கியன். |
தலைவன் ஏறிச் சென்ற கொடுஞ்சியை உடைய உயர்ந்ததேரானது தெள்ளிய நீரைஉடைய கடலை அடைந்த கரைக்கண் தெளிந்த ஓசையை உடைய மணிகள் ஒலிக்கும்படி நாம் காணும்படி வந்து பின்பு நாம் நாணும்படி மீண்டு செல்லா நிற்கும்; காமம்! இரங்கத் தக்கது; நிச்சயமாக அழியக்கடவதாகும்; இவை கருதி யான் வருந்துவேன்.
முடிபு: கொண்கன் ஊர்ந்த தேர் வந்து பெயரும்; காமம் அளிது;அது விளிவது; யான் நோகு.
கருத்து: தலைவன் குறை பெறாமல் வருந்திச் சென்றான்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 212. நெய்தல் - தோழி கூற்று, இலக்கியங்கள், தோழி, காமம், வந்து, குறுந்தொகை, கூற்று, நெய்தல், தலைவன், நாம், யான், விளிவது, உடைய, ஊர்ந்த, எட்டுத்தொகை, சங்க, கொண்கன், பெயரும்