குறுந்தொகை - 208. குறிஞ்சி - தலைவி கூற்று
(வரைவிடை வைத்துத் தலைவன் பொருள்வயிற் பிரிந்த காலத்து ஆற்றாளாகிய தலைமகளை நோக்கி, “நீ ஆற்றல் வேண்டும்” என்றதோழிக்கு அவள், “நான் தலைவர் கருத்தை உணர்ந்தேன்; ஆயினும் நொதுமலர் வரையப்புகுவரேல் என் செய்வதென ஆற்றேனாயினேன்”என்றது.)
ஒன்றே னல்லேன் ஒன்றுவென் குன்றத்துப் பொருகளிறு மிதித்த நெரிதாள் வேங்கை குறவர் மகளிர் கூந்தற் பெய்ம்மார் நின்றுகொய மலரும் நாடனொ டொன்றேன் றோழி ஒன்றினானே. |
5 |
- கபிலர். |
தோழி! யான் தலைவனோடு பொருந்தாத இயல்பினை உடையேனல்லேன்; பொருந்தும் இயல்பினேன்; ஆயினும் நொதுமலர் வரைவொடு புகுவதாகியதொரு காரணத்தினால் மலையினிடத்து ஒன்றோடொன்று பொருதகளிறுகளால் மிதிக்கப்பட்ட நெரிந்த அடியையுடைய வேங்கைமரம் குறமகளிர் தம்முடைய கூந்தலின்கண்ணே அணிந்துகொள்ளும்பொருட்டு ஏறவேண்டாமல்நின்ற படியே மலர்களைக் கொய்யும்படி தாழ்ந்துமலர்தற்கிடமாகிய நாட்டையுடைய தலைவனோடு பொருந்தேன்.
முடிபு: தோழி, ஒன்றேனல்லேன்; ஒன்றுவென்; ஒன்றனானேஒன்றேன்.
கருத்து: தலைவர் வரவு நீட்டித்தலின் நொதுமலர் வரையப்புகுவரென்று யான் ஆற்றேனாயினேன்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 208. குறிஞ்சி - தலைவி கூற்று, இலக்கியங்கள், குறிஞ்சி, நொதுமலர், குறுந்தொகை, தலைவி, கூற்று, தோழி, யான், தலைவனோடு, ஒன்றுவென், தலைவர், எட்டுத்தொகை, சங்க, ஆயினும்