குறுந்தொகை - 196. மருதம் - தோழி கூற்று
(ஊடியிருந்த தலைவியின் உடம்பாடு பெறுவதற்குத்துணை புரியும்வண்ணம் தலைவன் தோழியை வேண்டியபொழுது, “நீர் முன்பு எம்தலைவிபால் அன்புடையராயினீர்; இப்பொழுது அதனை நீங்கினீர்;ஆதலின் நும்மை ஏற்றுக் கொள்ளுமாறு எங்ஙனம்?” என்பது பட அவள்கூறியது.)
வேம்பின் பைங்காயென் தோழி தரினே தேம்பூங் கட்டி என்றனிர் இனியே பாரி பறம்பிற் பனிச்சுனைத் தெண்ணீர் தைஇத் திங்கள் தண்ணிய தரினும் வெய்ய உவர்க்கும் என்றனிர் |
5 |
ஐய அற்றால் அன்பின் பாலே. | |
- மிளைக் கந்தனார். |
ஐய! என் தோழியாகியதலைவி வேம்பினது பசிய காயை முன்பு தந்தால் இனிய பொலிவுபெற்ற வெல்லக்கட்டி என்று பாராட்டிக் கூறினீர்; இப்பொழுது பாரி யென்னும்வள்ளலுக்குரிய பறம்பென்னும் மலையிடத்திலுள்ள தை மாதத்திற் குளிர்ந்தனவாகிய குளிர்ச்சியையுடைய சுனையிலுள்ளதெளிந்த நீரைத் தந்தாலும் வெப்பத்தையுடையனவாகி உவர்ப்புச் சுவையைத்தருமென்று கூறினீர்; நுமது அன்பின் பகுதி அத்தகையது.
முடிபு: ஐய, என் தோழி வேம்பின்காய் தரின் கட்டி என்றனிர்;இனி, தண்ணிய தரினும் வெய்ய வுவர்க்கு மென்றனிர்; அன்பின்பால்அற்று.
கருத்து: முன்பு நீர் தலைவிமாட்டு அன்புடையராயிருந்து இப்போது அவ்வன்பு இல்லீராயினீர்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 196. மருதம் - தோழி கூற்று, தோழி, இலக்கியங்கள், என்றனிர், மருதம், குறுந்தொகை, கூற்று, முன்பு, தரினும், வெய்ய, அன்பின், கூறினீர், தண்ணிய, இப்பொழுது, எட்டுத்தொகை, சங்க, கட்டி, பாரி