குறுந்தொகை - 156. குறிஞ்சி - தலைவன் கூற்று
(தலைவியின்பால் விருப்புற்ற தன்னைப் பாங்கன் இடித்துரைத்தபோது தலைவன் பாங்கனை நோக்கி, "நீ இடித்துரைத்தலால் பயனொன்று மில்லை" என்று கூறியது.)
பார்ப்பன மகனே பார்ப்பன மகனே |
5 |
பிரிந்தோர்ப் புணர்க்கும் பண்பின் மருந்தும் உண்டோ மயலோ விதுவே. |
|
- பாண்டியன் ஏனாதி நெடுங்கண்ணனார். |
பார்ப்பன மகனே! செம்மையாகிய பூவையுடைய புரச மரத்தினது நல்ல பட்டையை நீக்கி விட்டு அதன் தண்டோடு ஏந்திய தாழ்கின்ற கரகத்தையும் விரதவுணவையுமுடைய வேதத்தையறிந்த நின்னுடைய அறிவுரைகளுள் பிரிந்த தலைவியரையும் தலைவர்களையும் சேரச் செய்யும் தன்மையையுடைய பரிகாரமும் இருக்கின்றதோ? இங்ஙனம் நீ கழறுதல் மயக்கத்தால் வந்ததாகும்.
முடிபு: பார்ப்பன மகனே, பார்ப்பன மகனே, பார்ப்பன மகனே, நின் சொல்லுள்ளும் மருந்துமுண்டோ? இது மயல்.
கருத்து: நீ என்னை இடித்துரைத்தலால் வரும் பயன் யாதும் இல்லை.
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 156. குறிஞ்சி - தலைவன் கூற்று, மகனே, பார்ப்பன, தலைவன், இலக்கியங்கள், குறுந்தொகை, கூற்று, குறிஞ்சி, எட்டுத்தொகை, சங்க, இடித்துரைத்தலால்