குறுந்தொகை - 139. மருதம் - தோழி கூற்று
(பரத்தையர் வீட்டிற்குச் சென்ற தலைவன் தலைவியிடத்தே மீண்டு வந்த காலத்தில் தோழி, “நீ இங்கே வந்தாற் பரத்தையர் பழி கூறுவார்; ஆதலின் இங்கே வாரற்க” என்று கூறியது.)
மனையுறை கோழிக் குறுங்காற் பேடை வேலி வெருகின மாலை யுற்றெனப் புகுமிட னறியாது தொகுபுடன் குழீஇய பைதற் பிள்ளைக் கிளைபயிர்ந் தாஅங் கின்னா திசைக்கும் அம்பலொடு |
5 |
வாரல் வாழிய ரையவெந் தெருவே. | |
- ஒக்கூர் மாசாத்தியார். |
ஐய! இல்லின்கண் உறைகின்ற கோழியினது குறிய காலையுடைய பேடையானது வேலிக்கு அயலில் உள்ள காட்டுப் பூனையின் கூட்டம் மாலைக் காலத்தில் உற்றதாக அதற்கு அஞ்சிப் பாதுகாப்பாகப் புகுதற்குரிய இடத்தை அறியாமல் சேர்ந்து ஒருங்கே கூடும் பொருட்டு துன்பத்தையுடைய குஞ்சுகளாகிய இனத்தை அழைத்துக் கூவினாற் போல இன்னாததாகிப் பரத்தையராற் கூறப்படும் பழி மொழியோடு எம்முடைய தெருவிற்கு வருதலை ஒழிவாயாக; நீ வாழ்வாயாக!
முடிபு: ஐய, அம்பலொடு எம் தெரு வாரல்; வாழியர்!
கருத்து: எம் தெருவிற்கு வரின் பரத்தையர் பழி கூறுவர்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 139. மருதம் - தோழி கூற்று, தோழி, இலக்கியங்கள், கூற்று, மருதம், பரத்தையர், குறுந்தொகை, வாரல், தெருவிற்கு, அம்பலொடு, காலத்தில், எட்டுத்தொகை, சங்க, இங்கே