குறுந்தொகை - 115. குறிஞ்சி - தோழி கூற்று
(தலைவனுடன் போகும்படி தலைவியை உய்க்கும் தோழி, “இவளை எக்காலத்தும் அன்பு வைத்துப் பாதுகாப்பாயாக” என்று அவனுக்குக் கூறியது.)
பெருநன் றாற்றிற் பேணாரும் உளரே ஒருநன் றுடையள் ஆயினும் புரிமாண்டு புலவி தீர அளிமதி இலைகவர் பாடமை ஒழுகிய தண்ணறுஞ் சாரல் மென்னடை மரையா துஞ்சும் |
5 |
நன்மலை நாட நின்னல திலளே. | |
- கபிலர். |
அசைகின்ற மூங்கில்கள் நீண்டு வளர்ந்த தண்ணிய நறிய மலைப் பக்கத்தின் கண் மெல்லிய நடையையுடைய மரையா இலைகளை விரும்பி உண்டு துயிலுதற்கிடமாகிய நல்ல மலை நாட்டையுடைய தலைவ பெரிய நன்மை யொன்றை ஒருவர் தமக்குச் செய்தால் அங்ஙனம் செய்தாரைப் போற்றாதாரும் உள்ளாரோ? யாவரும் போற்றுவர்; அது சிறப்பன்று; சிறிதளவு நன்மையை இத்தலைவி பெற்றவளாக இருக்கும் காலத்திலும் விருப்பம் மாட்சிமைப்பட்டு புலத்தல் நீங்கும் வண்ணம் இவளைப் பாதுகாப்பாயாக; இவள் நின்னையன்றி வேறு பற்றுக்கோடு இல்லாள்.
முடிபு: மலைநாட, பெருநன்று ஆற்றிற் பேணாரும் உளரே? ஒரு நன்று உடையள் ஆயினும் அளிமதி; நின்னலதிலள்.
கருத்து: இவள்பால் இன்று போல என்றும் அன்பு வைத்துப் பாது காப்பாயாக.
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 115. குறிஞ்சி - தோழி கூற்று, தோழி, இலக்கியங்கள், கூற்று, குறுந்தொகை, குறிஞ்சி, ஆயினும், அளிமதி, மரையா, உளரே, அன்பு, எட்டுத்தொகை, சங்க, வைத்துப், பேணாரும்