குறுந்தொகை - 112. குறிஞ்சி - தலைவி கூற்று
(தலைவன் வரைந்து கொள்ளாமல் நெடுநாள் ஒழுகினானாக, “நான் ஊரார் அலருக்கு அஞ்சி மறைந்து ஒழுகுகின்றேன்; என் காமம் மெலிகின்றது; அதனை முற்றும் விடும் நிலையைப் பெறும் ஆற்றலில்லேன்” என்று கூறித் தலைவி வருந்தியது.)
கௌவை யஞ்சிற் காமம் எய்க்கும் எள்ளற விடினே உள்ளது நாணே பெருங்களிறு வாங்க முரிந்துநிலம் படாஅ நாருடை ஒசியல் அற்றே கண்டிசின் தோழியவர் உண்டஎன் நலனே. |
5 |
- ஆலத்தூர் கிழார். |
தோழி! பிறர் கூறும் பழி மொழியை அஞ்சினால் காமம் மெலிவடையும்; பிறர் இழித்தல் அறும்படி அக்காமத்தை விட்டு விடின் என்பால் இருப்பது நாண மட்டுமே ஆகும்; தலைவர் நுகர்ந்த எனது பெண்மை நலம் பெரியகளிறு உண்ணும் பொருட்டு வளைக்க வளைந்து நிலத்திற்படாத பட்டையை உடைய ஒடிந்த கிளையைப் போன்றது; இதனைக் காண்பாயாக.
முடிபு: தோழி, கௌவை அஞ்சின் காமம் எய்க்கும்; விடின் நாணே உள்ளது; அவர் உண்ட நலன ஒசியலற்று; கண்டிசின்.
கருத்து: ஊரார் அலரை அஞ்சிக் காமத்தை மிகுதியாக வெளிப்படுத்தாமல் இருக்கின்றேன்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 112. குறிஞ்சி - தலைவி கூற்று, இலக்கியங்கள், காமம், தலைவி, கூற்று, குறிஞ்சி, குறுந்தொகை, கண்டிசின், நாணே, விடின், பிறர், தோழி, கௌவை, எட்டுத்தொகை, சங்க, ஊரார், எய்க்கும், உள்ளது