குறுந்தொகை - 10. பாலை - தோழி கூற்று
(பரத்தையிற் பிரிந்த தலைவன் மீண்டு வந்து வாயில் வேண்டியஇடத்துத் தோழி, ‘‘ஏற்றுக் கோடற்குத் தகாத கொடுமையை உடையனாயினும் அதனை மனங்கொள்ளாமல், கற்பொழுக்கத்தின் சிறப்பினால்தலைவன் கொடுமையை மறைத்து அவன் நாணும்படி தலைவி தானேஅவனை ஏற்றுக் கொள்ள வருகின்றாள்’’என்று கூறியது.)
யாயா கியளே விழவுமுத லாட்டி பயறுபோ லிணர பைந்தாது படீஇயர் உழவர் வாங்கிய கமழ்பூ மென்சினைக் காஞ்சி யூரன் கொடுமை கரந்தன ளாகலின் நாணிய வருமே. |
5 |
- ஓரம்போகியார். |
தலைவியாயவள் தலைவன் செல்வம் பெற்று மகிழ்ந்து குலாவு வதற்குக் காரணமாக உள்ளாள்; பயற்றின் கொத்தைப் போன்ற பூங்கொத்தில் உள்ளன வாகிய பசிய பூந்தாதுக்கள் தங்கள் மேலே படும்படி உழவர்கள் வளைத்த கமழ்கின்ற பூக்களை உடைய மெல்லிய கிளைகளைக் கொண்ட காஞ்சி மரத்தை உடைய ஊரனது கொடுமையை நாம் தெரிந்து கொள்ளாதபடி மறைத்தாள் ஆதலின் அவன் நாணும்படி எதிர்கொள்ள வருகின்றாள்.
முடிபு: விழவு முதலாட்டி, தலைவனது கொடுமையை வெளி யிடாமல் மறைத்தாளாதலால் அவன் நாணும்படி வாரா நின்றாள்.
கருத்து: தலைவி தலைவனது கொடுமையை மறைத்து அவனை ஏற்றுக் கொள்வாளாயினாள்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 10. பாலை - தோழி கூற்று, கொடுமையை, இலக்கியங்கள், தோழி, நாணும்படி, அவன், பாலை, குறுந்தொகை, கூற்று, காஞ்சி, உடைய, தலைவனது, ஏற்றுக், தலைவி, மறைத்து, தலைவன், சங்க, எட்டுத்தொகை