கலித்தொகை - கலித்தொகை - மருதக் கலி 97
அன்னை: கடுஞ் சொல் அறியாதாய் போல, நீ என்னைப் புலப்பது ஒறுக்குவென்மன் யான் சிறுகாலை இற் கடை வந்து, குறி செய்த அவ் வழி என்றும் யான் காணேன் திரிதர, 'எவ் வழிப் பட்டாய்?' சமனாக இவ் எள்ளல்; | 5 |
முத்து ஏர் முறுவலாய்! நம் வலைப் பட்டது ஓர் புத்தியானை வந்தது; காண்பான் யான் தங்கினேன்; ஒக்கும் அவ் யானை வனப்பு உடைத்தாகலும் கேட்டேன்: அவ் யானை தான் சுண்ண நீறு ஆடி, நறு நறா நீர் உண்டு | 10 |
ஒள் நுதல் யாத்த திலக அவிர் ஓடை, தொய்யில் பொறித்த வன முலை வான் கோட்டு, தொய்யகத் தோட்டி, குழை தாழ் வடி மணி, உத்தி பொறித்த புனை பூண் பருமத்து முத்து ஏய்க்கும் வெண் பல் நகை திறந்து, | 15 |
நல் நகர் வாயில் கதவ வெளில் சார்ந்து, தன் நலம் காட்டி, தகையினால், கால் தட்டி வீழ்க்கும், தொடர் தொடராக வலந்து; படர் செய்யும் மென் தோள் தடக் கையின் வாங்கி, தற் கண்டார் நலம் கவளம் கொள்ளும்; நகை முக வேழத்தை | 20 |
இன்று கண்டாய் போல் எவன் எம்மைப் பொய்ப்பது, நீ; எல்லா! கெழீஇ, தொடி செறித்த தோள் இணை, தத்தித் தழீஇக் கொண்டு, ஊர்ந்தாயும் நீ; குழீஇ அவாவினால், தேம்புவார் இற் கடை ஆறா, உவா அணி ஊர்ந்தாயும் நீ; | 25 |
மிகாஅது சீர்ப்பட உண்ட சிறு களி ஏர் உண்கண் நீர்க்கு விட்டு, ஊர்ந்தாயும் நீ; சார்ச்சார் நெறி தாழ் இருங் கூந்தல் நின் பெண்டிர் எல்லாம் சிறு பாகராகச் சிரற்றாது, மெல்ல, விடாஅது நீ எம் இல் வந்தாய்; அவ் யானை | 30 |
கடாஅம் படும்; இடத்து ஓம்பு; |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கலித்தொகை - கலித்தொகை - மருதக் கலி 97, இலக்கியங்கள், யான், கலித்தொகை, ஊர்ந்தாயும், மருதக், கலித்தொகை, நலம், தோள், சிறு, தாழ், முத்து, எட்டுத்தொகை, சங்க, யானை, பொறித்த