கலித்தொகை - கலித்தொகை - மருதக் கலி 94
என் நோற்றனைகொல்லோ நீருள் நிழல் போல் நுடங்கிய மென் சாயல் ஈங்கு உருச் சுருங்கி இயலுவாய்! நின்னோடு உசாவுவேன்; நின்றீத்தை; அன்னையோ! காண் தகை இல்லாக் குறள் நாழிப் போழ்தினான், | 5 |
ஆண்தலைக்கு ஈன்ற பறழ் மகனே நீ! எம்மை, 'வேண்டுவல்' என்று விஇலக்கினை; நின் போல்வார் தீண்டப் பெறுபவோ மற்று; மாண்ட எறித்த படை போல் முடங்கி மடங்கி, நெறித்துவிட்டன்ன நிறை ஏரால் என்னைப் | 10 |
பொறுக்கல்லா நோய் செய்தாய்; பொறீஇ நிறுக்கல்லேன்; நீ நல்கின் உண்டு, என் உயிர் குறிப்புக் காண் வல்லுப் பலகை எடுத்து நிறுத்தன்ன கல்லாக் குறள! கடும் பகல் வந்து எம்மை, 'இல்லத்து வா' என, மெய் கொளீஇ, எல்லா! நின் | 15 |
பெண்டிர் உளர்மன்னோ? கூறு; நல்லாய்! கேள்: உக்கத்து மேலும் நடு உயர்ந்து வாள் வாய கொக்கு உரித்தன்ன கொடு மடாய்! நின்னை யான் புக்கு அகலம் புல்லின், நெஞ்சு ஊன்றும்; புறம் புல்லின், அக்குளுத்து; புல்லலும் ஆற்றேன்; அருளீமோ, | 20 |
பக்கத்துப் புல்லச் சிறிது 'போ, சீத்தை! மக்கள் முரியே! நீ மாறு, இனி; தொக்க மரக் கோட்டம் சேர்ந்து எழுந்த பூங் கொடி போல, நிரப்பம் இல் யாக்கை தழீஇயினர், எம்மைப் புரப்பேம் என்பாரும் பலரால்; பரத்தை என் | 25 |
பக்கத்துப் புல்லீயாய் என்னுமால்; தொக்க உழுந்தினும் துவ்வா, குறு வட்டா! நின்னின் இழிந்ததோ, கூனின் பிறப்பு?' 'கழிந்து ஆங்கே, "யாம் வீழ்தும்" என்று தன் பின் செலவும், உற்றீயாக் கூனி குழையும் குழைவு காண்'; | 30 |
'யாமை எடுத்து நிறுத்தற்றால், தோள் இரண்டும் வீசி, யாம் வேண்டேம் என்று விலக்கவும், எம் வீழும் காமர் நடக்கும் நடை காண்' 'கவர் கணைச் சாமனார் தம்முன் செலவு காண்க'; ஓஒ! காண், நம்முள் நகுதல் தொடீஇயர், நம்முள் நாம் | 35 |
உசாவுவம்; கோன் அடி தொட்டேன்; ஆங்கு ஆக! சாயல் இன் மார்ப! அடங்கினேன்; 'ஏஎ! பேயும் பேயும் துள்ளல் உறும்' எனக் கோயிலுள் கண்டார் நகாமை வேண்டுவல்; தண்டாத் தகடு உருவ! வேறாகக் காவின் கீழ்ப் | 40 |
போதர்; அகடு ஆரப் புல்லி முயங்குவேம் துகள் தபு காட்சி அவையத்தார் ஓலை முகடு காப்பு யாத்துவிட்டாங்கு. |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கலித்தொகை - கலித்தொகை - மருதக் கலி 94, இலக்கியங்கள், கலித்தொகை, காண், கலித்தொகை, மருதக், யாம், தொக்க, நம்முள், பேயும், பக்கத்துப், காண்&, எடுத்து, போல், சங்க, சாயல், எம்மை, எட்டுத்தொகை, புல்லின்