கலித்தொகை - கலித்தொகை - மருதக் கலி 93
வண்டு ஊது சாந்தம் வடுக் கொள நீவிய, தண்டாத் தீம் சாயற் பரத்தை, வியல் மார்ப! பண்டு, இன்னை அல்லைமன்; ஈங்கு எல்லி வந்தீய, கண்டது எவன்? மற்று உரை; நன்றும் தடைஇய மென் தோளாய்! கேட்டீவாயாயின் | 5 |
உடன் உறை வாழ்க்கைக்கு உதவி உறையும் கடவுளர்கண் தங்கினேன்; சோலை மலர் வேய்ந்த மான் பிணை அன்னார் பலர், நீ கடவுண்மை கொண்டு ஒழுகுவார்; அவருள், எக் கடவுள்? மற்று அக் கடவுளைச் செப்பீமன் | 10 |
'முத்து ஏர் முறுவலாய்! நாம் மணம் புக்கக்கால், "இப் போழ்து போழ்து" என்று அது வாய்ப்பக் கூறிய அக் கடவுள், மற்று அக் கடவுள் ' 'அது ஒக்கும் நா உள் அழுந்து தலை சாய்த்து நீ கூறும்; மாயமோ; கைப்படுக்கப் பட்டாய் நீ; கண்டாரை | 15 |
வாயாக யாம் கூற வேட்டீவாய்! கேள், இனி; பெறல் நசை வேட்கையின் நின் குறி வாய்ப்பப் பறி முறை நேர்ந்த நகாராக, கண்டார்க்கு இறு முறை செய்யும் உருவொடு, நும் இல், செறி முறை வந்த கடவுளைக் கண்டாயோ; | 20 |
நறுந் தண் தகரமும் நானமும் நாறும் நெறிந்த குரல் கூந்தல் நாள் அணிக்கு ஒப்ப, நோக்கின் பிணி கொள்ளும் கண்ணொடு, மேல் நாள், நீ பூப் பலி விட்ட கடவுளைக் கண்டாயோ; ஈர் அணிக்கு ஏற்ற ஒடியாப் படிவத்துச் | 25 |
சூர் கொன்ற செவ்வேலாற் பாடி, பல நாளும், ஆராக் கனை காமம் குன்றத்து நின்னொடு மாரி இறுத்த கடவுளைக் கண்டாயோ; கண்ட கடவுளர்தம்முளும், நின்னை வெறி கொள் வியன் மார்பு வேறாகச் செய்து, | 30 |
குறி கொளச் செய்தார் யார்? செப்பு: மற்று யாரும் சிறு வரைத் தங்கின் வெகுள்வர்; செறு தக்காய்! தேறினேன்; சென்றீ நீ செல்லா விடுவாயேல், நல் தார் அகலத்துக்கு ஓர் சார மேவிய நெட்டிருங் கூந்தற் கடவுளர் எல்லார்க்கும் | 35 |
முட்டுப்பாடு ஆகலும் உண்டு. |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கலித்தொகை - கலித்தொகை - மருதக் கலி 93, இலக்கியங்கள், மற்று, முறை, கடவுளைக், கண்டாயோ, கலித்தொகை, கடவுள், கலித்தொகை, மருதக், அணிக்கு, நாள், சங்க, குறி, எட்டுத்தொகை