கலித்தொகை - கலித்தொகை - மருதக் கலி 76
'புனைஇழை நோக்கியும், புனல் ஆடப் புறம் சூழ்ந்தும், அணி வரி தைஇயும், நம் இல் வந்து வணங்கியும், நினையுபு வருந்தும் இந் நெடுந்தகை திறத்து, இவ் ஊர் இனையள் என்று எடுத்து ஓதற்கு அனையையோ நீ?' என வினவுதியாயின், விளங்கிழாய்! கேள், இனி: | 5 |
'செவ் விரல் சிவப்பு ஊரச் சேண் சென்றாய்' என்று, அவன் பௌவ நீர்ச் சாய்க் கொழுதிப் பாவை தந்தனைத்தற்கோ 'கௌவை நோய் உற்றவர் காணாது கடுத்த சொல் ஒவ்வா' என்று உணராய், நீ ஒரு நிலையே உரைத்ததை; ஒடுங்கி, யாம் புகல் ஒல்லேம் பெயர்தர, அவன் கண்டு, | 10 |
நெடுங் கய மலர் வாங்கி, நெறித்துத் தந்தனைத்தற்கோ விடுந்தவர் விரகு இன்றி எடுத்த சொல் பொய்யாகக் கடிந்ததும் இலையாய், நீ கழறிய வந்ததை; 'வரி தேற்றாய், நீ' என, வணங்கு இறை அவன் பற்றி, தெரி வேய்த் தோள் கரும்பு எழுதித் தொய்யில் செய்தனைத்தற்கோ | 15 |
புரிபு நம் ஆயத்தார் பொய்யாக எடுத்த சொல் உரிது என உணராய், நீ உலமந்தாய் போன்றதை என ஆங்கு, அரிது இனி, ஆயிழாய்! அது தேற்றல்; புரிபு ஒருங்கு, அன்று நம் வதுவையுள் நமர் செய்வது இன்று, ஈங்கே, | 20 |
தான் நயந்து இருந்தது இவ்வூர் ஆயின், எவன்கொலோ நாம் செயற்பாலது, இனி. |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கலித்தொகை - கலித்தொகை - மருதக் கலி 76, இலக்கியங்கள், மருதக், சொல், கலித்தொகை, அவன், கலித்தொகை, எடுத்த, புரிபு, உணராய், சங்க, தந்தனைத்தற்கோ, எட்டுத்தொகை