கலித்தொகை - கலித்தொகை - மருதக் கலி 75
'நீர் ஆர் செறுவில் நெய்தலொடு நீடிய நேர் இதழ் ஆம்பல் நிரை இதழ் கொண்மார், சீர் ஆர் சேயிழை ஒலிப்ப, ஓடும் ஓரை மகளிர் ஓதை வெரீஇ எழுந்து, ஆரல் ஆர்கை அம் சிறைத் தொழுதி | 5 |
உயர்ந்த பொங்கர் உயர் மரம் ஏறி, அமர்க் கண் மகளிர் அலப்பிய அந் நோய் தமர்க்கு உரைப்பன போல், பல் குரல் பயிற்றும் உயர்ந்த போரின் ஒலி நல் ஊரன் புதுவோர்ப் புணர்தல் வெய்யன்ஆயின், | 10 |
வதுவை நாளால் வைகலும், அஃது யான் நோவேன், தோழி! நோவாய், நீ' என எற் பார்த்து உறுவோய்! கேள், இனித் தெற்றென: 'எல்லினை வருதி; எவன் குறித்தனை?' எனச் சொல்லாதிருப்பேனாயின், ஒல்லென, | 15 |
விரிஉளைக் கலி மான் தேரொடு வந்த விருந்து எதிர்கோடலின், மறப்பல், என்றும்; 'வாடிய பூவொடு வாரல், எம் மனை?' என ஊடியிருப்பேனாயின், நீடாது, அச்சு ஆறாக உணரிய வருபவன் | 20 |
பொய்ச் சூள் அஞ்சிப் புலவேன் ஆகுவல் 'பகல் ஆண்டு அல்கினை, பரத்த!' என்று யான் இகலியிருப்பேனாயின், தான் தன் முதல்வன் பெரும் பெயர் முறையுளிப் பெற்ற புதல்வற் புல்லிப் பொய்த் துயில் துஞ்சும் | 25 |
ஆங்க விருந்து எதிர் கொள்ளவும், பொய்ச் சூள் அஞ்சவும், அரும் பெறல் புதல்வனை முயங்கக் காணவும், ஆங்கு அவிந்து ஒழியும், என் புலவி தாங்காது, அவ்அவ் இடத்தான் அவைஅவை காண | 30 |
பூங் கண் மகளிர் புனை நலம் சிதைக்கும் மாய மகிழ்நன் பரத்தைமை நோவேன், தோழி! கடன் நமக்கு எனவே. |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கலித்தொகை - கலித்தொகை - மருதக் கலி 75, இலக்கியங்கள், கலித்தொகை, மகளிர், கலித்தொகை, மருதக், விருந்து, தோழி, பொய்ச், சூள், நோவேன், உயர்ந்த, சங்க, இதழ், எட்டுத்தொகை, யான்