கலித்தொகை - கலித்தொகை - குறிஞ்சிக் கலி 38
இமைய வில் வாங்கிய ஈர்ஞ் சடை அந்தணன் உமை அமர்ந்து உயர்மலை இருந்தனனாக, ஐ இரு தலையின் அரக்கர் கோமான் தொடிப் பொலி தடக் கையின் கீழ் புகுத்து, அம் மலை எடுக்கல்செல்லாது உழப்பவன் போல | 5 |
உறு புலி உரு ஏய்ப்பப் பூத்த வேங்கையைக் கறுவு கொண்டு, அதன் முதல் குத்திய மத யானை நீடு இரு விடர் அகம் சிலம்பக் கூய், தன் கோடு புய்க்கல்லாது, உழக்கும் நாட! கேள்: ஆர் இடை என்னாய் நீ அரவு அஞ்சாய் வந்தக்கால், | 10 |
நீர் அற்ற புலமே போல் புல்லென்றாள், வைகறை, கார் பெற்ற புலமே போல், கவின் பெறும்; அக் கவின் தீராமல் காப்பது ஓர் திறன் உண்டேல், உரைத்தைக்காண்; இருள் இடை என்னாய் நீ இரவு அஞ்சாய் வந்தக்கால், பொருளில்லான் இளமை போல் புல்லென்றாள், வைகறை, | 15 |
அருள் வல்லான் ஆக்கம் போல் அணி பெறும்; அவ் அணி தெருளாமல் காப்பது ஓர் திறன் உண்டேல், உரைத்தைக்காண்; மறம் திருந்தார் என்னாய் நீ மலையிடை வந்தக்கால், அறம் சாரான் மூப்பே போல் அழிதக்காள், வைகறை, திறம் சேர்ந்தான் ஆக்கம் போல் திருத்தகும்; அத் திருப் | 20 |
புறங்கூற்றுத் தீர்ப்பது ஓர் பொருள் உண்டேல், உரைத்தைக்காண்; என ஆங்கு, நின் உறு விழுமம் கூறக் கேட்டு, வருமே, தோழி! நல் மலை நாடன் வேங்கை விரிவு இடம் நோக்கி, | 25 |
வீங்கு இறைப் பணைத் தோள் வரைந்தனன் கொளற்கே. |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கலித்தொகை - கலித்தொகை - குறிஞ்சிக் கலி 38, போல், இலக்கியங்கள், வந்தக்கால், கலித்தொகை, உண்டேல், வைகறை, என்னாய், குறிஞ்சிக், கலித்தொகை, உரைத்தைக்காண், காப்பது, திறன், பெறும், ஆக்கம், புலமே, எட்டுத்தொகை, சங்க, அஞ்சாய், புல்லென்றாள், கவின்