கலித்தொகை - கலித்தொகை - குறிஞ்சிக் கலி 37
கய மலர் உண்கண்ணாய்! காணாய் ஒருவன் வய மான் அடித் தேர்வான் போல, தொடை மாண்ட கண்ணியன் வில்லன், வரும்; என்னை நோக்குபு, முன்னத்தின் காட்டுதல் அல்லது, தான் உற்ற நோய் உரைக்கல்லான் பெயரும்மன், பல் நாளும்; | 5 |
பாயல் பெறேஎன், படர் கூர்ந்து, அவன்வயின் சேயேன்மன் யானும் துயர் உழப்பேன்; ஆயிடைக் கண் நின்று கூறுதல் ஆற்றான், அவனாயின்; பெண் அன்று, உரைத்தல், நமக்காயின்; 'இன்னதூஉம் காணான் கழிதலும் உண்டு' என்று, ஒரு நாள், என் | 10 |
தோள் நெகிழ்பு உற்ற துயரால் துணிதந்து, ஓர் நாண் இன்மை செய்தேன் நறுநுதால்! ஏனல் இனக் கிளி யாம் கடிந்து ஓம்பும் புனத்து அயல், ஊசல் ஊர்ந்து ஆட, ஒரு ஞான்று வந்தானை, 'ஐய! சிறிது என்னை ஊக்கி' எனக் கூற, | 15 |
'தையால்! நன்று! என்று அவன் ஊக்க, கை நெகிழ்பு பொய்யாக வீழ்ந்தேன், அவன் மார்பின்; வாயாச் செத்து, ஒய்யென ஆங்கே எடுத்தனன் கொண்டான்; மேல் மெய் அறியாதேன் போல் கிடந்தேன்மன்; ஆயிடை மெய் அறிந்து ஏற்று எழுவேனாயின், மற்று ஒய்யென, | 20 |
'ஒண்குழாய்! செல்க' எனக் கூறி விடும் பண்பின் அங்கண் உடையன் அவன் |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கலித்தொகை - கலித்தொகை - குறிஞ்சிக் கலி 37, இலக்கியங்கள், கலித்தொகை, அவன், கலித்தொகை, குறிஞ்சிக், மெய், எனக், ஒய்யென, என்னை, எட்டுத்தொகை, சங்க, உற்ற, நெகிழ்பு