கலித்தொகை - கலித்தொகை - நெய்தற் கலி 147
ஆறு அல்ல மொழி தோற்றி, அற வினை கலக்கிய, தேறுகண் நறவு உண்டார் மயக்கம்போல், காமம் வேறு ஒரு பாற்று ஆனதுகொல்லோ? சீறடிச் சிலம்பு ஆர்ப்ப, இயலியாள் இவள் மன்னோ, இனி மன்னும் புலம்பு ஊரப் புல்லென்ற வனப்பினாள் விலங்கு ஆக, | 5 |
வேல் நுதி உற நோக்கி, வெயில் உற, உருகும் தன் தோள் நலம் உண்டானைக் கெடுத்தாள் போல், தெருவில் பட்டு, ஊண் யாதும் இலள் ஆகி, உயிரினும் சிறந்த தன் நாண் யாதும் இலள் ஆகி, நகுதலும் நகூஉம்; ஆங்கே பெண்மையும் இலள் ஆகி அழுதலும் அழூஉம்: தோழி! ஓர் | 10 |
ஒண்ணுதல் உற்றது உழைச் சென்று கேளாமோ? இவர் யாவர் ஏமுற்றார் கண்டீரோ? ஓஒ! அமையும் தவறிலீர் மற்கொலோ நகையின் மிக்கதன் காமமும் ஒன்று என்ப; அம்மா புது நலம் பூ வாடியற்று, தாம் வீழ்வார் | 15 |
மதி மருள நீத்தக்கடை; என்னையே மூசி, கதுமென நோக்கன்மின் வந்து கலைஇய கண், புருவம், தோள், நுசுப்பு, ஏஎர் சில மழைபோல் தாழ்ந்து இருண்ட கூந்தல், அவற்றை விலை வளம் மாற அறியாது, ஒருவன் | 20 |
வலை அகப்பட்டது என் நெஞ்சு வாழிய, கேளிர்! பலவும் சூள் தேற்றித் தெளித்தவன் என்னை முலையிடை வாங்கி முயங்கினன், நீத்த கொலைவனைக் காணேன்கொல், யான்; | 25 |
காணினும், என்னை அறிதிர்; கதிர் பற்றி, ஆங்கு எதிர் நோக்குவன் ஞாயிறே! எம் கேள்வன் யாங்கு உளன் ஆயினும் காட்டீமோ? காட்டாயேல், வானத்து எவன் செய்தி, நீ? ஆர் இருள் நீக்கும் விசும்பின் மதி போல, | 30 |
நீருள்ளும் தோன்றுதி, ஞாயிறே! அவ் வழித் தேரை தினப்படல் ஓம்பு நல்கா ஒருவனை நாடி யான் கொள்வனை, பல் கதிர் சாம்பிப் பகல் ஒழிய, பட்டீமோ செல் கதிர் ஞாயிறே! நீ; | 35 |
அறாஅல் இன்று அரி முன்கைக் கொட்கும் பறாஅப் பருந்தின்கண் பற்றிப் புணர்ந்தான் கறாஅ எருமைய காடு இறந்தான்கொல்லோ? உறாஅத் தகை செய்து, இவ் ஊர் உள்ளான்கொல்லோ? செறாஅது உளனாயின், கொள்வேன்; அவனைப் | 40 |
பெறாஅது யான் நோவேன்; அவனை எற் காட்டிச் சுறாஅக் கொடியான் கொடுமையை, நீயும், உறாஅ அரைச! நின் ஓலைக்கண் கொண்டீ, மறாஅ அரைச! நின் மாலையும் வந்தன்று; அறாஅ தணிக, இந் நோய்; | 45 |
தன் நெஞ்சு ஒருவற்கு இனைவித்தல், யாவர்க்கும் அன்னவோ காம! நின் அம்பு; கையாறு செய்தானைக் காணின், கலுழ் கண்ணால் பையென நோக்குவேன்; தாழ் தானை பற்றுவேன்; ஐயம் கொண்டு, என்னை அறியான் விடுவானேல் | 50 |
ஒய்யெனப் பூசல் இடுவேன்மன், யான் அவனை மெய்யாகக் கள்வனோ என்று; வினவன்மின் ஊரவிர்! என்னை, எஞ்ஞான்றும் அடாஅ நறவு உண்டார் போல, மருள விடாஅது உயிரொடு கூடிற்று என் உண்கண் | 55 |
படாஅமை செய்தான் தொடர்பு கனவினான் காணிய, கண் படாஆயின், நனவினான், ஞாயிறே! காட்டாய் நீஆயின், பனை ஈன்ற மா ஊர்ந்து, அவன் வர, காமன் கணை இரப்பேன், கால் புல்லிக்கொண்டு | 60 |
என ஆங்கு, கண் இனைபு, கலுழ்பு ஏங்கினள்; தோள் ஞெகிழ்பு, வளை நெகிழ்ந்தனள்; அன்னையோ! எல்லீரும் காண்மின்; மடவரல் மெல் நடைப் பேடை துனைதர, தற் சேர்ந்த | 65 |
அன்ன வான் சேவல் புணர்ச்சிபோல், ஒண்ணுதல் காதலன் மன்ற அவனை வரக் கண்டு, ஆங்கு ஆழ் துயரம் எல்லாம் மறந்தனள், பேதை நகை ஒழிந்து, நாணு மெய் நிற்ப, இறைஞ்சி, தகை ஆகத் தையலாள் சேர்ந்தாள் நகை ஆக, | 70 |
நல் எழில் மார்பன் அகத்து. |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கலித்தொகை - கலித்தொகை - நெய்தற் கலி 147, ஞாயிறே, இலக்கியங்கள், யான், என்னை, கதிர், ஆங்கு, நின், அவனை, கலித்தொகை, இலள், தோள், கலித்தொகை, நெய்தற், சங்க, எட்டுத்தொகை, நறவு, அரைச, உண்டார், நலம், ஒண்ணுதல், மருள, நெஞ்சு, யாதும்