கலித்தொகை - கலித்தொகை - நெய்தற் கலி 137
அரிதே, தோழி! நாண் நிறுப்பாம் என்று உணர்தல்; பெரிதே காமம்; என் உயிர் தவச் சிறிதே; பலவே யாமம்; பையுளும் உடைய; சிலவே, நம்மோடு உசாவும் அன்றில்; அழல் அவிர் வயங்கு இழை ஒலிப்ப, உலமந்து, | 5 |
எழில் எஞ்சு மயிலின் நடுங்கி, சேக்கையின் அழல் ஆகின்று, அவர் நக்கதன் பயனே; மெல்லிய நெஞ்சு பையுள் கூர, தம் சொல்லினான் எய்தமை அல்லது, அவர் நம்மை வல்லவன் தைஇய, வாக்கு அமை கடு விசை | 10 |
வில்லினான் எய்தலோ இலர்மன்; ஆயிழை! வில்லினும் கடிது, அவர் சொல்லினுள் பிறந்த நோய், நகை முதலாக, நட்பினுள் எழுந்த தகைமையில் நலிதல் அல்லது, அவர் நம்மை வகைமையின் எழுந்த தொல் முரண் முதலாக, | 15 |
பகைமையின் நலிதலோ இலர்மன்; ஆயிழை! பகைமையிற் கடிது, அவர் தகைமையின் நலியு நோய், நீயலேன்' என்று என்னை அன்பினால் பிணித்து, தம் சாயலின் சுடுதல் அல்லது, அவர் நம்மைப் பாய் இருள் அற நீக்கும் நோய் தபு நெடுஞ் சுடர்த் | 20 |
தீயினால் சுடுதலோ இலர்மன்; ஆயிழை! தீயினும் கடிது, அவர் சாயலின் கனலும் நோய்; ஆங்கு அன்னர் காதலராக, அவர் நமக்கு இன் உயிர் பேர்த்தரும் மருத்துவர் ஆயின், | 25 |
யாங்கு ஆவதுகொல்? தோழி! எனையதூஉம் தாங்குதல் வலித்தன்று ஆயின், நீங்கரிது உற்ற அன்று, அவர் உறீஇய நோயே. |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கலித்தொகை - கலித்தொகை - நெய்தற் கலி 137, அவர், இலக்கியங்கள், நோய், இலர்மன், நெய்தற், ஆயிழை, கடிது, கலித்தொகை, அல்லது, கலித்தொகை, முதலாக, எழுந்த, சாயலின், ஆயின், எட்டுத்தொகை, உயிர், நம்மை, தோழி, சங்க, அழல்