கலித்தொகை - கலித்தொகை - முல்லைக் கலி 110
'கடி கொள் இருங் காப்பில் புல்லினத்து ஆயர் குடிதொறும் நல்லாரை வேண்டுதி எல்லா! இடு தேள் மருந்தோ, நின் வேட்கை தொடுதரத் துன்னி, தந்தாங்கே, நகை குறித்து, எம்மைத் திளைத்தகு எளியமாக் கண்டை; "அளைக்கு எளியாள் | 5 |
வெண்ணெய்க்கும் அன்னள்" எனக் கொண்டாய்' ஒண்ணுதால்! ஆங்கு நீ கூறின், அனைத்தாக; நீங்குக; அச்சத்தான் மாறி, அசைவினான் போத்தந்து, நிச்சம் தடுமாறும் மெல் இயல் ஆய்மகள்! மத்தம் பிணித்த கயிறு போல், நின் நலம் | 10 |
சுற்றிச் சுழலும் என் நெஞ்சு; விடிந்த பொழுதினும் இல்வயின் போகாது, கொடுந் தொழுவினுள் பட்ட கன்றிற்குச் சூழும் கடுஞ்சூல் ஆ நாகு போல், நிற் கண்டு, நாளும், நடுங்கு அஞர் உற்றது என் நெஞ்சு | 15 |
எவ்வம் மிகுதர, எம் திறத்து, எஞ்ஞான்றும், நெய் கடை பாலின் பயன் யாதும் இன்றாகி, கை தோயன் மாத்திரை அல்லது, செய்தி அறியாது அளித்து என் உயிர்;' அன்னையோ, மன்றத்துக் கண்டாங்கே, 'சான்றார் மகளிரை | 20 |
இன்றி அமையேன்' என்று, இன்னவும் சொல்லுவாய்; நின்றாய்; நீ சென்றீ; எமர் காண்பர்; நாளையும் கன்றொடு சேறும், புலத்து. |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கலித்தொகை - கலித்தொகை - முல்லைக் கலி 110, இலக்கியங்கள், கலித்தொகை, கலித்தொகை, முல்லைக், போல், நின், எட்டுத்தொகை, சங்க