அகநானூறு - 89. பாலை
தெறு கதிர் ஞாயிறு நடு நின்று காய்தலின், உறு பெயல் வறந்த ஓடு தேர் நனந் தலை, உருத்து எழு குரல குடிஞைச் சேவல், புல் சாய் விடரகம் புலம்ப, வரைய கல் எறி இசையின் இரட்டும் ஆங்கண், |
5 |
சிள்வீடு கறங்கும் சிறிஇலை வேலத்து ஊழுறு விளைநெற்று உதிர, காழியர் கவ்வைப் பரப்பின் வெவ் உவர்ப்பு ஒழிய, களரி பரந்த கல் நெடு மருங்கின், விளர் ஊன் தின்ற வீங்குசிலை மறவர் |
10 |
மை படு திண் தோள் மலிர வாட்டி, பொறை மலி கழுதை நெடு நிரை தழீஇய திருந்து வாள் வயவர் அருந் தலை துமித்த படு புலாக் கமழும் ஞாட்பில், துடி இகுத்து, அருங் கலம் தெறுத்த பெரும் புகல் வலத்தர், |
15 |
வில் கெழு குறும்பில் கோள் முறை பகுக்கும் கொல்லை இரும் புனம் நெடிய என்னாது, மெல்லென் சேவடி மெலிய ஏக வல்லுநள்கொல்லோ தானே தேம் பெய்து அளவுறு தீம் பால் அலைப்பவும் உண்ணாள், |
20 |
இடு மணற் பந்தருள் இயலும், நெடு மென் பணைத் தோள், மாஅயோளே? |
மகட்போக்கிய செவிலித்தாய் சொல்லியது. - மதுரைக்காஞ்சிப் புலவர்
தேடல் தொடர்பான தகவல்கள்:
அகநானூறு - 89. பாலை , இலக்கியங்கள், பாலை, அகநானூறு, நெடு, தோள், சங்க, எட்டுத்தொகை