அகநானூறு - 85 . பாலை
'நல் நுதல் பசப்பவும், பெருந் தோள் நெகிழவும், |
5 |
ஈன்று நாள் உலந்த மெல் நடை மடப் பிடி, கன்று, பசி களைஇய, பைங் கண் யானை முற்றா மூங்கில் முளை தருபு. ஊட்டும் வென் வேல் திரையன் வேங்கட நெடு வரை, நல் நாள் பூத்த நாகு இள வேங்கை |
10 |
நறு வீ ஆடிய பொறி வரி மஞ்ஞை நனைப் பசுங் குருந்தின் நாறு சினை இருந்து, துணைப் பயிர்ந்து அகவும் துணைதரு தண் கார், வருதும், யாம்' எனத் தேற்றிய பருவம்காண் அது; பாயின்றால் மழையே. |
15 |
தலைமகன் பிரிய, வேறுபட்ட தலைமகளைத் தோழி வற்புறுத்தியது.- காட்டூர் கிழார் மகனார் கண்ணனார்
தேடல் தொடர்பான தகவல்கள்:
அகநானூறு - 85 . பாலை , இலக்கியங்கள், அகநானூறு, பாலை, நாள், தோழி, சங்க, எட்டுத்தொகை