அகநானூறு - 76. மருதம்
மண் கனை முழவொடு மகிழ் மிகத்
தூங்க, தண் துறை ஊரன் எம் சேரி வந்தென இன் கடுங் கள்ளின் அஃதை களிற்றொடு நன் கலன் ஈயும் நாள் மகிழ் இருக்கை அவை புகு பொருநர் பறையின், ஆனாது, |
5 |
கழறுப என்ப, அவன் பெண்டிர்; 'அந்தில், கச்சினன், கழலினன், தேம் தார் மார்பினன், வகை அமைப் பொலிந்த, வனப்பு அமை, தெரியல், சுரியல் அம் பொருநனைக் காண்டிரோ? என, ஆதிமந்தி பேதுற்று இனைய, |
10 |
சிறை பறைந்து உரைஇச் செங்குணக்கு ஒழுகும் அம் தண் காவிரி போல, கொண்டு கை வலித்தல் சூழ்ந்திசின், யானே. |
'தலைமகனை நயப்பித்துக் கொண்டாள்' என்று கழறக் கேட்ட பரத்தை,தலைமகட்குப் பாங்காயினார் கேட்ப, சொல்லியது. - பரணர்
தேடல் தொடர்பான தகவல்கள்:
அகநானூறு - 76. மருதம், இலக்கியங்கள், மருதம், அகநானூறு, மகிழ், எட்டுத்தொகை, சங்க