அகநானூறு - 58. குறிஞ்சி
இன் இசை உருமொடு கனை துளி தலைஇ, மன் உயிர் மடிந்த பானாட் கங்குல், காடு தேர் வேட்டத்து விளிவு இடம் பெறாஅது, வரி அதள் படுத்த சேக்கை, தெரி இழைத் தேன் நாறு கதுப்பின் கொடிச்சியர் தந்தை, |
5 |
கூதிர், இல் செறியும் குன்ற நாட! வனைந்து வரல் இள முலை ஞெமுங்க, பல் ஊழ் விளங்கு தொடி முன்கை வளைந்து புறம் சுற்ற, நின் மார்பு அடைதலின் இனிது ஆகின்றே நும் இல் புலம்பின் நும் உள்ளுதொறும் நலியும் |
10 |
தண்வரல் அசைஇய பண்பு இல் வாடை பதம் பெறுகல்லாது இடம் பார்த்து நீடி, மனைமரம் ஒசிய ஒற்றிப் பலர் மடி கங்குல், நெடும் புறநிலையே. |
சேட்படுத்து வந்த தலைமகற்குத் தலைமகள் சொல்லியது. - மதுரைப் பண்ட வாணிகன் இளந்தேவனார்
தேடல் தொடர்பான தகவல்கள்:
அகநானூறு - 58. குறிஞ்சி , இலக்கியங்கள், அகநானூறு, குறிஞ்சி, நும், இடம், சங்க, எட்டுத்தொகை, கங்குல்