அகநானூறு - 346.மருதம்
நகை நன்று அம்ம தானே இறை மிசை மாரிச் சுதையின் ஈர்ம் புறத்து அன்ன கூரல் கொக்கின் குறும் பறைச் சேவல், வெள்ளி வெண் தோடு அன்ன, கயல் குறித்து, கள் ஆர் உவகைக் கலி மகிழ் உழவர் |
5 |
காஞ்சி அம் குறுந் தறி குத்தி, தீம் சுவை மென் கழைக் கரும்பின் நன் பல மிடைந்து, பெருஞ் செய் நெல்லின் பாசு அவல் பொத்தி, வருத்திக் கொண்ட வல் வாய்க் கொடுஞ் சிறை மீது அழி கடு நீர் நோக்கி, பைப்பயப் |
10 |
பார்வல் இருக்கும் பயம் கேழ் ஊர! யாம் அது பேணின்றோ இலமே நீ நின் பண் அமை நல் யாழ்ப் பாணனொடு, விசி பிணி, மண் ஆர், முழவின் கண் அதிர்ந்து இயம்ப, மகிழ் துணைச் சுற்றமொடு மட்டு மாந்தி, |
15 |
எம் மனை வாராயாகி, முன் நாள், நும் மனைச் சேர்ந்த ஞான்றை, அம் மனைக் குறுந் தொடி மடந்தை உவந்தனள் நெடுந் தேர், இழை அணி யானைப் பழையன் மாறன், மாட மலி மறுகின் கூடல் ஆங்கண், |
20 |
வெள்ளத் தானையொடு வேறு புலத்து இறுத்த கிள்ளி வளவன் நல் அமர் சாஅய், கடும் பரிப் புரவியொடு களிறு பல வவ்வி, ஏதில் மன்னர் ஊர் கொள, கோதை மார்பன் உவகையின் பெரிதே. |
25 |
தோழி தலைமகற்கு வாயில் மறுத்தது. - நக்கீரர்
தேடல் தொடர்பான தகவல்கள்:
அகநானூறு - 346.மருதம் , இலக்கியங்கள், அகநானூறு, மருதம், குறுந், மகிழ், சங்க, எட்டுத்தொகை, அன்ன