அகநானூறு - 326. மருதம்
ஊரல் அவ் வாய் உருத்த தித்தி, பேர் அமர் மழைக் கண், பெருந் தோள், சிறு நுதல், நல்லள் அம்ம, குறுமகள் செல்வர் கடுந் தேர் குழித்த ஞௌளல் ஆங்கண், நெடுங் கொடி நுடங்கும் மட்ட வாயில், |
5 |
இருங் கதிர்க் கழனிப் பெருங் கவின் அன்ன நலம் பாராட்டி, நடை எழில் பொலிந்து, விழவில் செலீஇயர் வேண்டும் வென் வேல் இழை அணி யானைச் சோழர் மறவன் கழை அளந்து அறியாக் காவிரிப் படப்பை, |
10 |
புனல் மலி புதவின், போஒர் கிழவோன், பழையன் ஓக்கிய வேல் போல், பிழையல கண், அவள் நோக்கியோர் திறத்தே! |
தோழி தலைமகனை வாயில் மறுத்தது. - பரணர்
தேடல் தொடர்பான தகவல்கள்:
அகநானூறு - 326. மருதம், இலக்கியங்கள், அகநானூறு, மருதம், வேல், வாயில், சங்க, எட்டுத்தொகை