அகநானூறு - 318. குறிஞ்சி
கான மான் அதர் யானையும் வழங்கும்; வான மீமிசை உருமும் நனி உரறும்; அரவும் புலியும் அஞ்சுதகவு உடைய; இர வழங்கு சிறு நெறி தமியை வருதி வரை இழி அருவிப் பாட்டொடு பிரசம் |
5 |
முழவு சேர் நரம்பின் இம்மென இமிரும், பழ விறல் நனந்தலைப் பய மலை நாட! மன்றல் வேண்டினும் பெறுகுவை; ஒன்றோ இன்று தலையாக வாரல்; வரினே, ஏம் உறு துயரமொடு யாம் இவண் ஒழிய, |
10 |
எக் கண்டு பெயருங் காலை, யாழ நின் கல் கெழு சிறுகுடி எய்திய பின்றை, ஊதல் வேண்டுமால் சிறிதே வேட்டொடு வேய் பயில் அழுவத்துப் பிரிந்த நின் நாய் பயிர் குறி நிலை கொண்ட கோடே! |
15 |
இரவுக்குறி வந்த தலைமகனை வரவு விலக்கி வரைவு கடாயது. - கபிலர்
தேடல் தொடர்பான தகவல்கள்:
அகநானூறு - 318. குறிஞ்சி , இலக்கியங்கள், குறிஞ்சி, அகநானூறு, நின், எட்டுத்தொகை, சங்க